அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மடு பகுதியில் வெள்ளத்தினால் இடம் பெயர்ந்த மக்களும் டெலோ உதவி-படம்

மன்னார் மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக மடு பிரதேசச்  செயலகத்திற்குட்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் மற்றும் பாலம்பிட்டி பிரதேசங்களில் வெள்ள பாதீப்புக்கள் ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 65 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு தேவையான நுளம்பு வலைகள், பாய்கள் போன்றவற்றை தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான  செல்வம் அடைக்கலநாதனின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை தமிழ் ஈழ விடுதலை இயக்கம் டெலோ கட்சியின் பிரதி நிதிகள் நேரடியாக சென்று வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.










மன்னார் மடு பகுதியில் வெள்ளத்தினால் இடம் பெயர்ந்த மக்களும் டெலோ உதவி-படம் Reviewed by Author on December 07, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.