அண்மைய செய்திகள்

recent
-

மன்னரில் பொது ஜன பெரமுன கட்சியின் புதிய அமைப்பாளருக்கு பிராமாண்ட வரவேற்பு-

வன்னி மாவட்டத்தின் பொது ஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர் எஹியான் பாய் அவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு மற்றும் மக்கள் சந்திப்பானது  இன்று சனிக்கிழமை (15) மதியம் 12 மணியளவில் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக் குற்பட்ட பெரிய மடு   கிராமத்தில் இடம் பெற்றது.

 அண்மையில் பொது ஜன பெரமுன கட்சியின் வன்னி மாவட்ட   அமைப்பாளராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களினால்  தெரிவு செய்யப்பட்டு, பொது ஜன பெரமுன கட்சி சார்பாக எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்யிடவுள்ள   மன்னார் முசலியைச் செர்ந்த எஹியான் பாய் அவர்களை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தும் நிகழ்வும் , அவருடைய மக்கள் சந்திப்பு நிகழ்வும்  பெரியமடு கிராமத்தில் இடம் பெற்றது.

குறித்த நிகழ்விற்கு முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அலிக்கான் சரீப் , மாந்தை மேற்கு பிரதேச சபையின் உப தலைவர் முஹமட் தௌபிக் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் , பொது ஜன பெரமுன கட்சி ஆதரவாளர்கள்  பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டதுடன் தங்களுடைய ஆதரவையும்  தெரிவித்திருந்தனர்.

பிரமாண்டமான வாகன பவனியுடன் ஆரம்பித்த குறித்த மக்கள் சந்திப்புக்கு மாந்தை மேற்கு பிரதேச செயலக பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.






மன்னரில் பொது ஜன பெரமுன கட்சியின் புதிய அமைப்பாளருக்கு பிராமாண்ட வரவேற்பு- Reviewed by Author on February 16, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.