மன்னாரில் வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைப்பு
மன்னார் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள்
இன்றைய தினம்செவ்வாய்க்கிழi காலை 8 மணி முதல் காலை 11 மணி வரையான
நேரப்பகுதிக்குள் பலத்த பாதுகாப்புடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு
எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
மன்னார் புனித
சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும்
நிலையத்தில் இருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச்
செல்லப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில்
அமைக்கப்பட்டுள்ள 76 வாக்களிப்பு நிலையங்களுக்கு இவ்வாறு வாக்குப்
பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மன்னார்
மாவட்டத்தில் இம்முறை 88 ஆயிரத்து 842 பேர் வாக்களிக்க தகுதி
பெற்றுள்ளனர்.அவர்களில் 6 ஆயிரம் வாக்களர்கள் புத்தளத்தில் இடம்
பெயர்ந்துள்ள நிலையில் புத்தளத்தில் வாக்களிக்க ஏற்பாடுகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வாக்கு
எண்ணும் நிலையமாக மாற்றப்பட்டுள்ள மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய
பாடசாலை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு,கொரோ னா
தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் சுகாதார நடைமுறைகள்
பேணப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது..
மன்னாரில் வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைப்பு
Reviewed by Author
on
August 04, 2020
Rating:
No comments:
Post a Comment