உடையார்கட்டு, புதுக்குடியிருப்பு சமுர்த்தி வங்கிகளின் செயற்பாடுகள் கணணி மயப்படுத்தப்பட்டு(Online) மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ளன.
இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த கணினி மயப்படுத்தப்பட்ட வங்கிச் சேவைகளை ஆரம்பித்து வைத்தார்.
இதனூடாக வழமையான வங்கி சேவைகளை கணினி மயமாக்கல் ஊடக இலத்திரனியல் புத்தகம் வழங்கி அதனூடாக வங்கிச் சேவைகள் இலகுபடுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் வங்கியின் வழமையான சேவைகளை கணனி மயப்படுத்தலூடாக மக்கள் பெற்றுக் கொள்ள முடியும்.
இந் நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், மாவட்ட கருத்திட்ட முகாமையாளர், மாவட்ட சமுர்த்தி உள்ளகக் கணக்காய்வாளர்கள், பிரதேச செயலக சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கணனி மயப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறாவது வங்கியாக உடையார்கட்டு சமுர்த்தி வங்கியும், ஏழாவது வங்கியாக புதுக்குடியிருப்பு சமுர்த்தி வங்கியும் கணினி மயமாக்கப்பட்ட சேவைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உடையார்கட்டு, புதுக்குடியிருப்பு சமுர்த்தி வங்கிகளின் செயற்பாடுகள் கணணி மயப்படுத்தப்பட்டு(Online) மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ளன.
Reviewed by Author
on
November 23, 2020
Rating:
No comments:
Post a Comment