மன்னாரில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கான 'கொரோனா' பாதுகாப்பு பொருட்கள் கையளிப்பு
கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில் பாடசாலை மாணவர்களின் சுகாதார நிலமைகளை கருத்தில் கொண்டு மன்னார் வலயக்கல்வி பணிமனையின் தெரிவின் அடிப்படையில் மன்-உயிலங்குளம் றோமன் கத்தோழிக்க தமிழ் கலவன் பாடசாலை,மன்- சிவராஜா இந்து மாகா வித்தியாலயம் மற்றும் மடுக்கரை அரசினர் தமிழ் கலவன் படசாலைகளுக்கு மேற்படி சுகாதார பொருட்கள் முதற்கட்டமாக கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் , மன்னார் பிரதி கல்வி பணிப்பாளர் திருமதி.வாசுகி சுதாகரன் , மெசிடோ நிறுவன ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கான சுகாதார பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
மேலும் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 13 பாடசாலைகளை சேர்ந்த 1300 மாணவர்கள் பயன் பெறக் கூடிய வகையில் மேற்படி சுகாதார பொருட்கள் கையளிக்கப்பட்டவுள்ளமை குறிப்பிடதக்கது.
மன்னாரில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கான 'கொரோனா' பாதுகாப்பு பொருட்கள் கையளிப்பு
Reviewed by Author
on
February 23, 2021
Rating:
No comments:
Post a Comment