அண்மைய செய்திகள்

recent
-

ஒடுக்கப்படும் தமிழ் மக்களின் பலமான குரலாக செயற்பட்டவர் மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப்-தமிழ் தேசிய மக்கள் முன்னணி

ஒடுக்கப்படும் தமிழ் மக்களின் பலமான குரலாக செயற்பட்டவர் மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி மேலும் தெரிவித்துள்ளதாவது முன்னாள் மன்னார் மறைவாட்ட பேராயர் இராயப்பு யோசேப் ஆண்டகையின் மறைவுச் செய்தியறிந்து ஆழ்ந்த கவலையடைகின்றோம். 

 ஈழத் தமிழரின் உரிமைக்கான போராட்ட காலத்திலும்இ போர் நிறைவுபெற்றதன் பின்னரும்இ ஒடுக்கப்படும் ஈழத் தமிழ் மக்களின்இ பலமான குராலாக செயற்பட்ட பேராயர் இராயப்பு யோசேப் ஆண்டகையின் மறைவு கத்தோலிக்க திருச்சபைக்கும்இ தமிழ் தேச மக்களுக்கும் ஈடுசெய்யப்பட முடியாத பேரிழப்பாகும். சிறீலங்கா அரசு தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்தை இன அழிப்பு யுத்தம் மூலம் 2009 மே 18 இல் முடிவுக்கு கொண்டுவந்த பின்னர்இ தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ் மக்களை அரசியல் அநாதைகளாக்க முயன்றபோதுஇ தமிழ்த் தேசத்தில் நடைபெற்ற இனவழிப்புக்கு நீதியைக் கோரிஇ சர்வதேச பொறுப்புக்கூறலை எந்தவித விட்டுக்கொடுப்புமின்றி வலியுறுத்திஇ தமிழ் சிவில் சமூக அமையத்தினூடாக ஆண்டகை அவர்கள் தலைமையை வழங்கியிருந்தார். 

 குருத்துவத்தின் புனிதத்தையும்இ மேன்மையையும் தாங்கிஇ ஒடுக்கப்பட்ட தமிழினத்தின்; உண்மையானதும் நீதியானதுமான பொறுப்புக்கூறலுக்காகஇ பேராயர் இராயப்பு யோசெப் ஆண்டகையின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. ஆண்டகையின் வெற்றிடத்தை நிரப்புவது என்பது கடினமான பணியாகும். ஈழத்து திருச்சபையின் பணியாளர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை ஆண்டகையின் வாழ்வும் குருத்துவமும் எடுத்துக்காட்டியுள்ளது. 

யேசுக்கிறிஸ்து பணிக்குருத்துவத்தை நிறுவியதை நினைவு கூரும்இ புனித வியாழன் நாளாகிய இன்று மேதகு ஆண்டகை அவர்களும் தனது தலைமைக் குருவின் திருப்பாதம் நாடிச்சென்று அமைதியில் உறங்குகின்றார். மேதகு ஆண்டகையின் பேரிழப்பால் துயருறும் கத்தோலிக்க திருச்சபையினதும்இ அவரது குடும்பத்தினரதும் துயரில் ஈழத் தமிழ் மக்களுடன் இணைந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாமும் பங்குகொள்கின்றோம்.

 இறைவனின் உன்னத திருப்பாதம் நாடிச்சென்ற ஆண்டகைஇ இறைவனின் அருகில் இருந்துஇ விடுதலைக்காக ஏங்கும் தமிழ் தேச இனத்துக்காக பரிந்துபேசிஇ எமக்கான சக்தியை வழங்குபவராக தொடர்ந்தும் இருப்பார் என்னும் நம்பிக்கை எமக்குண்டு. தமிழ் மக்களுக்கான நீதிக்காக ஓங்கி ஒலித்த குரல் இன்று அமைதியில் உறங்குகின்றது. தமிழ் மக்களின் உணர்வுகளுடன் கலந்துஇ உடலால் அமரத்துவம் அடைந்த ஆண்டகையின் ஆன்மா நித்திய அமைதி அடைவதாக. இன்றிலிருந்து மேதகு ஆண்டகையின் திருவுடல் அடக்கம் செய்யப்படும் வரை தமிழ்த் தேசத்தில் துக்க நாளாக அனுஸ்டிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.






ஒடுக்கப்படும் தமிழ் மக்களின் பலமான குரலாக செயற்பட்டவர் மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப்-தமிழ் தேசிய மக்கள் முன்னணி Reviewed by Author on April 01, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.