ஒரு இனம் இன்னொரு இனத்திற்கு எதிராக செயற்படுவது சரியில்லை மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ இரங்கல் செய்தியில் தெரிவிப்பு
இரண்டு வருடங்களுக்கு முன்பாக பாஸ்கா திருவிழா அன்று குண்டு வெடிப்புக்களினால் பலர் இறந்து போனார்கள் அந்த குண்டுவெடிப்புகளில் இரண்டு பெரிய கத்தோலிக்க ஆலயங்காலிலும் இன்னுமொரு ஆலயம் மட்டக்களப்பிலிருந்து ஒரு கிறிஸ்தவ ஆலயத்திலும் மக்கள் இந்த குண்டு தாக்குதல் அவர்களுடைய உயிரை இழந்தார்கள்
அத்தோடு இன்னும் பல ஹோட்டல்களிலும் மக்கள் அன்று இந்த குண்டு தாக்குதலினால் தங்களுடைய உயிர்களை துறந்தார்கள் நாங்கள் அவர்களை இன்று விசேடமாக நினைவு கூறுவோம் இரண்டு ஆண்டுகள் கடந்து போயிருந்தாலும் நாங்கள் எமது ஆலயங்களில் குறிப்பாக மன்னார் மறைமாவட்டத்தில் எமது ஆலயங்களிலே சரியாக காலை நேரம் 8.45 மணிக்கு கோயில் மணியை நாதமிட்டு தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் மௌனம் அஞ்சலி செலுத்துமாறு மக்களை கேட்டிருக்கின்றோம்.
அந்த இரண்டு நிமிடங்களின் போது ஆலயங்களில் மக்கள் கூடி இருந்தால் அவர்கள் அந்த நேரத்தை செபிப்பது இந்த உயிர் திருவிழான்று எங்களுக்கு தெரியும் நாங்கள் விசேடமாக நினைவுகூரும் ஒரு சிறப்பான இயேசுநாதரின் கூற்றுதான் உயிர்ப்பும் உயிரும் நானே என்னில் விசுவாசம் கொள்பவன் இறப்பினும் வாழ்வார் என்று அந்த வார்த்தைகள்
ஆகையினால் நாங்கள் விசுவசிப்பது இவர்கள் இந்த கூட்டு தாக்குதலினால் அவர்களுடைய உயிர்களை இழந்தாலும் அவர்கள் என்றும் வாழ்வார்கள் என்று அவர்களுக்காக நாங்கள் செபிப்பது எமது கடமை அவர்களை இந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு இப்படியாக விஷேடமாக நினைவு கூறுகின்றோம் அது உண்மையிலேயே ஒவ்வொரு வருடமும் இடம்பெற வேண்டும் அவர்களை நாங்கள் மறந்துவிட முடியாது
இப்படியாக குண்டு தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர்களை இன்னும் இனம் கண்டு கொள்ளவில்லை அவர்களுக்கு பின்னால் யார் இருந்தார்கள் என்பதையும் இன்னும் சரியாக கண்டு கொள்ளவில்லை எனவே தான் எங்களுக்கு ஒரு நீதி அவசியம் அது யார் செய்தது எதற்காக செய்தார்கள் என்பதை நாங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
ஒரு இனம் என்னொரு இனத்திற்கு எதிராக செல்வது சரியில்லை நாங்கள் எந்த மதத்தை சார்ந்தாலும் எந்த மொழியை சார்ந்தாலும் நாங்கள் ஒரு நல்ல இணக்கப்பாட்டுடன் ஒற்றுமையாக வாழ்வது முக்கியம்
ஒரு தவறை செய்தவரை மன்னிப்பது இயேசுவினால் எங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு கட்டளை ஆகையினால் தான் நாங்கள் இப்படியான ஒரு பெரிய தவறு செய்தவரை கூட மன்னிக்க அழைக்கப்படுகின்றோம் ஆனாலும் எது உண்மை எது நடந்தது என்ற நீதியை நாங்கள் அறிந்து கொள்வது எங்களுக்கு மிகவும் முக்கியமாக இருக்கின்றது எனவே இந்த வருடம் அவர்களை விசேடமாக நினைவு கூர்ந்து அந்த நீதியை எதிர்பார்ப்போம் இவர்கள் தங்களது உயிரை இழந்ததன் வழியாக அவர்கள் இறைவனிடமிருந்து மென்மேலும் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்றும் மன்றாடிக்கொள்வோம் என அவர் இரங்கள் செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஒரு இனம் இன்னொரு இனத்திற்கு எதிராக செயற்படுவது சரியில்லை மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ இரங்கல் செய்தியில் தெரிவிப்பு
Reviewed by Author
on
April 21, 2021
Rating:
No comments:
Post a Comment