மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 1350 கிலோ உலர்ந்த மஞ்சள் மூட்டைகள் பறிமுதல்.
அந்த படகை நோக்கி மெரைன் பொலிஸார் கடலில் செல்லும் ஸ்கூட்டரில் சென்ற போது பொலிஸ் வருவதை கண்டு படகில் இருந்த நபர்கள் கடலில் குதித்து தப்பி ஓடினர்.
பின்னர் மெரைன் பொலிஸார் நாட்டு படகில் ஏறி சோதனை செய்த போது படகிற்குள் இலங்கைக்கு கடத்துவதற்காக மூட்டை மூட்டையாக சமையல் மஞ்சள் இருந்தது தெரியவந்தது.
இதனனயடுத்து நாட்டு படகுடன், சமையல் மஞ்சள் மூட்டைகளை பறிமுதல் செய்த மெரைன் பொலிஸார் மண்டபம் மெரைன் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சள் மூட்டைகளை எடையிட்டு பார்த்த போது மொத்தமாக 1350 கிலோ இருந்தமை தெரி யவந்தது.
இதனையடுத்து மஞ்சள் மூட்டைகளையும், நாட்டு படகையும் மெரைன் பொலிஸார் மண்டபம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சள் குறித்து மெரைன் பொலிஸார் மண்டபம் அடுத்த மரைக்காயர்பட்டிணம், சீனியப்ப தர்ஹா, சுந்தரமடையான், வேதாளை, தோப்புக்காடு கிராமங்களில் உள்ள மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீப காலமாக மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடல் அட்டை, கடல் பல்லி, கஞ்சா, சமையல் மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் அதிகமாக கடத்தப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 1350 கிலோ உலர்ந்த மஞ்சள் மூட்டைகள் பறிமுதல்.
Reviewed by Author
on
July 11, 2021
Rating:
No comments:
Post a Comment