மன்னாரில் 'அடைக்கலம் அறக்கட்டளை' ஊடாக வறிய குடும்பங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஊக்குவிப்பு தொகை வழங்கி வைப்பு
பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் டானியல் வசந் தலைமையில் இடம் பெற்ற குறித்த ஆரம்ப நிகழ்வில் தமிமீழ விடுதலை இயக்கம் டெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளரும்,மன்னார் பிரதேச சபை உறுப்பினருமான ஏ.ரி.மோகன்ராஜ் கலந்து கொண்டார்.
இதன் போது முதல் கட்டமாக பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு ஊக்கு விப்பு பணம் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.
தொடர்ச்சியாக மன்னார் மாவட்டத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவர்களின் மிகவும் பின் தங்கிய குடும்பம் மற்றும் பெற்றோரை இழந்த மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு குறித்த ஊக்கு விப்பு தொகை மாத மாதம் வழங்கப்படும் என குறித்த அறக்கட்டளையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மன்னாரில் 'அடைக்கலம் அறக்கட்டளை' ஊடாக வறிய குடும்பங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஊக்குவிப்பு தொகை வழங்கி வைப்பு
Reviewed by Author
on
July 08, 2021
Rating:
No comments:
Post a Comment