அண்மைய செய்திகள்

recent
-

பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு கிறிசலிஸ் (Chrysalis) நிறுவனத்தினால் வாழ் வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு!

கிறிசலிஸ்(Chrysalis) நிறுவனத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட பெண்களின் சமூக பொருளாதார கட்டமைப்பினை வலுப்பெறச் செய்தல் திட்டத்தினூடாக வாழ்வாதார உதவித் திட்டங்கள் வழங்கும் நிகழ்வு கரைதுறைப்பற்று பிரதேச சபை கலாசார மண்டபத்தில் கடந்த 24.05.2022ம் திகதி காலை 10.00மணிக்கு இடம்பெற்றது. கிறிசலிஸ் நிறுவனத்தின் சிரேஸ்ட திட்ட இணைப்பாளர் ப.ஜெதீபன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க க.விமலநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த உதவித் திட்டங்களை வழங்கி வைத்தார். இதன்போது கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 100 பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான வாழ்வாதார உதவித் திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

இவர்களுக்கு உற்பத்தித் திறன், வியாபார திட்டம் தயாரித்தல், சந்தைப்படுத்தல், தொழில்நுட்ப விருத்தி சார்ந்த 11நாட் பயிற்சிகள் வழங்கப்பட்ட பின்னர் குறித்த உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கிறிசலிஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி ஆசிக்க குணசேனன், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி வில்வராஜா, கிறிசலிஸ் நிறுவன நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் வினோபவன், ஆலோசனை சேவைகள் பிரிவின் பொறுப்பதிகாரி இந்தியா பெனான்டோ, வடமாகாண திட்ட நிகழ்சித் திட்ட பொறுப்பதிகாரி எம்.பிரபாகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன், கரைதுறைப்பற்று பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் சர்மி, கரைதுறைப்பற்று பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கயூரதன், உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.















பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு கிறிசலிஸ் (Chrysalis) நிறுவனத்தினால் வாழ் வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு! Reviewed by Author on May 27, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.