அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி தொடர்பில் விசேட கலந்துரையாடல்

சட்டவிரோத மீன்பிடி தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுவருகிறது முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு நந்திக்கடல் களப்பு பகுதிகளிலும் கடற்பிரதேசத்திலும் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி முறைகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்று வருகிறது 

 முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் இடம்பெற்றுவரும் கலந்துரையாடலில் கடற்படை உயரதிகாரிகள் பொலிஸ் உயரதிகாரிகள் இராணுவத்தினர் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்கள் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர் இந்த கலந்துரையாடலில் சுருக்கு வலை பாவித்து மீன்பிடித்தல் வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல் டைனமற் பாவித்து மீன்பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள்தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகின்றது








முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி தொடர்பில் விசேட கலந்துரையாடல் Reviewed by Author on May 19, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.