அண்மைய செய்திகள்

recent
-

ஊரடங்கின் போது மன்னார் ஏரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதற்றமான நிலை

இலங்கை முழுவது இன்று வியாழக்கிழமை(12) மதியம் 2 மணிதொடக்கம் நாளை வெள்ளிக்கிழமை(13) காலை 6 மணிவரை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்கு திடீர் என மக்கள் கூடியமையால் பதற்றமான சூழல் எற்பட்டது இன்று மாலை ஊரடங்கு காலப்பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அவசர சேவைகளுக்கு என எரிபொருள் விநியோகம் இடம் பெற்ற நிலையில் காலை முழுவதும் காத்திருந்து எரிபொருள் கிடைக்காதவர்கள் மாலை நேரம் எரிபொருள் பெற முயன்ற நிலையில் ஏரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் மற்றும் பொது மக்களுக்கு இடையில் முறுகள் நிலை ஏற்பட்டது

 சாதாரண நேரங்களில் எரிபொருள் நிரப்ப சென்றால் எரிபொருள் இல்லை இல்லை என ஏரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் தெரிவிப்பதாகவும் நள்ளிரவு நேரங்களில் சில தனியார்களுக்கு அதிகவிலையிலும் அதிக அளவிலும் ஏரிபொருட்களை வழங்குவதாகவும் கூறி மக்கள் முரண்பட்டனர் இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் பொது மக்களுடன் கலந்துரையாடி மக்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்த நிலையில் எரிபொருள் நிரப்ப வருகை தந்த அனைவரும் கலந்து சென்றனர்







ஊரடங்கின் போது மன்னார் ஏரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதற்றமான நிலை Reviewed by Author on May 12, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.