அண்மைய செய்திகள்

recent
-

காதலியை கொன்ற காதலன்: தலையுடன் போலீசில் சரண்

திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியதை தட்டிக் கேட்ட காதலி தலையை துண்டித்து கொலை செய்த காதலன், போலீசில் சரணடைந்தார். கர்நாடக மாநிலம் விஜயநகரா மாவட்டம், ஹொஸ்பேட் தாலுகா, கானஹொசஹள்ளி கன்னபோரய்யனஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் போஜராஜு, 25.இவர், இதே கிராமத்தை சேர்ந்த நிர்மலா, 23, என்ற பெண்ணை மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தார். 

அடிக்கடி இருவரும் சந்தித்து பழகி வந்தனர்.இதனால், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அப்பெண் கூறியுள்ளார். ஆனால், மூன்று மாதங்களுக்கு முன், காதலன் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் 'என்னை ஏமாற்றி விட்டாயே' என்று, அந்த வாலிபரிடம் அடிக்கடி காதலி சண்டை போட்டு வந்துள்ளார். இந்நிலையில், நிர்மலா நேற்று தன் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, வீட்டுக்குள் திடீரென புகுந்த போஜராஜு, கத்தியால் நிர்மலா கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின், நிர்மலா தலையை தனியாக துண்டித்து எடுத்தவர், கானஹொசஹள்ளி போலீஸ் நிலையத்துக்கு தலையுடன் சென்று சரணடைந்தார்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


காதலியை கொன்ற காதலன்: தலையுடன் போலீசில் சரண் Reviewed by Author on July 22, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.