தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக இந்தியா செல்ல முயன்ற 13 நபர்கள் கைது-
கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஆண்கள்,பெண்கள்,சிறுவர்கள்,சிறுமிகள் உள்ளடங்களாக 13 பேர் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
தலை மன்னார் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் இன்று சனிக்கிழமை (6) மதியம் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் 8 நபர்களை எதிர்வரும் 10ஆம் திகதி (10-08-2022) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
ஏனைய 5 சிறுவர்களையும் சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகள் ஊடாக உரிய பாதுகாவலரிடம் ஒப்படைக்கும்படி நீதவான் உத்தரவிட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வவுனியா, திருகோணமலை மற்றும் மொறவெவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக இந்தியா செல்ல முயன்ற 13 நபர்கள் கைது-
Reviewed by Author
on
August 06, 2022
Rating:
No comments:
Post a Comment