அண்மைய செய்திகள்

recent
-

திருமணத்திற்கு வற்புறுத்தியதால் காதலியின் உடலை 35 துண்டுகளாக வெட்டி எறிந்த கொடூர காதலன்!

காதலியை கொலை செய்து அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்து, அதனை 18 நாட்களாக நகர் முழுவதும் எறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவின் புதுடெல்லியில் இடம்பெற்றுள்ளது. புதுடெல்லி ஷ்ரத்தா என்ற பெண்ணும் அப்தாப் என்பவரும் மும்பையில் உள்ள கோல் சென்டரில் பணிபுரிந்து வந்த நிலையில் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. அவர்களது காதலுக்கு குடும்பம் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல்ஜோடிகள் டெல்லிக்கு சென்று மெஹ்ராலியில் தனியாக வீடு எடுத்து திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசிக்கத் தொடங்கினர். 

 இந்த நிலையில் ஷ்ரத்தா திருமணம் செய்து கொள்ளுமாறு அடிக்கடி வற்புறுத்தி வந்ததால் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு உள்ளது. கடந்த மே மாதம் அப்தாப் ஷ்ரத்தாவை கழுத்தை நெறித்து கொலை செய்து பின்னர் ரம்பத்தை கொண்டு அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி உள்ளார். அதன் பின்னர் ஒரு பெரிய பிரிட்ஜ் வாங்கி அதில் வைத்து 18 நாட்களாக டெல்லி முழுவதும் அவற்றை ஒவ்வொன்றாக தூக்கி எறிந்து உள்ளார். இந்த நிலையில் ஷ்ரத்தாவின் குடும்பம் சமூக வலை தளங்கள் மூலம் அவர் இருக்கும் இடத்தை அறிந்து தந்தை , அவரை பார்க்க டெல்லிக்கு வந்தார். ஆனால், அவரை தொடர்பு கொள்ள முடியாததால் பொலிஸில் புகார் செய்து உள்ளார். இதனையடுத்து பொலிஸார் இரகசிய தகவலின் பேரில் அப்தாபை கைது செய்து விசாரணை நடத்தியதில் மேற்கண்ட தகவல்கள் தெரிய வந்து உள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்திற்கு வற்புறுத்தியதால் காதலியின் உடலை 35 துண்டுகளாக வெட்டி எறிந்த கொடூர காதலன்! Reviewed by Author on November 14, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.