அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தினால் மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு தொகை வழங்கிவைப்பு

மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தில் ஏற்பாட்டில் தமிழ் கத்தோலிக்க ஒன்றியம் (ஐக்கிய இராச்சியத்தின்) நிதி ஒதிக்கீட்டில் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வும் அதே நேரம் அவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கும் நிகழ்வும் மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் தலைவர் அருட்தந்த நவரட்ணம் தலைமையில் இடம் பெற்றது

 மன்னார் மாவட்டத்தில் கல்வி ரீதியில் ஊக்குவிப்பு தேவைப்படும் 51 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான நிதி உதவி வருடம் தோறும் மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தினால் வழங்கி வைக்கப்படும் நிலையில் 2023 ஆண்டுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவும் மற்றும் ஊக்குவிப்பு கொடுப்பனவு பெறும் மாணவர்களின் குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் வாழ்வுதய மண்டபத்தில் இன்று சனிக்கிழமை வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது 

 குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட விவிலிய ஆணைக்குழுவின் இயக்குனர் அருட்கலாநிதி கிறிஸ்ரி ரூபன் பெர்னாண்டோ அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கிறிஸ்தவ வாலிபர் முன்னனி(YMCA) அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள் மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் பிரதிநிதிகள் உத்தியோகஸ்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்

















மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தினால் மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு தொகை வழங்கிவைப்பு Reviewed by Author on December 03, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.