அண்மைய செய்திகள்

recent
-

இந்தியாவில் ஆள்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன்; உயிரிழந்திருக்கலாம் என தகவல்

இந்தியாவின் மாண்டவி கிராமத்தில், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த தன்மே சாஹுவை அவசரகால சேவைகள் 60 மணி நேரத்திற்கும் மேலாக மீட்க முயன்றனர். ஆனால் அவர்கள் 8 வயது குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. நான்கு நாட்களுக்கு முன் குறுகிய ஆள்துளைக் கிணற்றில் தவறி விழுந்த ‘சாஹு’ உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தற்போது உறுதி செய்துள்ளன. சிறுவன் தன்மே சாஹு தனது 12 வயது சகோதரியுடன் விளையாடிக் கொண்டிருந்த போது அக்கிணற்றில் விழுந்துள்ளார்.

 சம்பவம் நிகழ்ந்த உடன் குழுவினர் கிணற்றுக்குச் சென்றுள்ளனர். அதற்குள் குழந்தை சாதாரணமாக இருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் சுமார் 40 மணித்தியாலங்கள் கடந்தும் அவரிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவில் ஆள்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன்; உயிரிழந்திருக்கலாம் என தகவல் Reviewed by Author on December 11, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.