அண்மைய செய்திகள்

recent
-

கர்ப்பிணி மனைவிக்கு ஹெச்ஐவி பாதித்த ரத்தத்தை செலுத்திய கொடூர கணவன்!

: கர்ப்பிணி மனைவிக்கு ஊசி மூலம் ஹெச்ஐவி பாதிக்கப்பட்ட ரத்தத்தை செலுத்திய கணவனின் செயல் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்கு முறையான காரணம் சொல்வதற்காக கர்ப்பிணியாக இருந்த மனைவியின் உடலில் எய்ட்ஸ் நோய் பாதித்தவரின் ரத்தத்தை செலுத்தியுள்ளார் கணவர். பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆந்திரா மாநிலம், விஜயவாடா பகுதியைச் சேர்ந்த சரண் (40) என்பவர் மனைவி, மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதோடு ஆண் குழந்தை வேண்டும் என்றும் வரதட்சனை பணம் கேட்டும் இவர் மனைவியை தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

 இந்த நிலையில், சரணின் மனைவி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், திருமணத்துக்கு பிறகு நானும் எனது கணவர் சரணும் நல்ல முறையில் குடும்பம் நடத்தி வந்தோம். எங்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார். இதனிடையே கடந்த 2018 ம் ஆண்டுமுதல் எங்களுக்குள் சிறு சிறு பிரச்னை வர ஆரம்பித்தது. அடிக்கடி வரதட்சனை பணம் கேட்டும், ஆண் குழந்தை பெற்று தர வேண்டும் எனவும் அடித்து துன்புறுத்துவார். இதற்கிடையில் நான் கர்ப்பமானேன். ஆனால், என் கணவர் சரணுக்கு விசாகப்பட்டணத்தைச் சேர்ந்த 21 வயது பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பெண்ணை திருமணம் செய்வதற்காக என்னை விவாகரத்து செய்ய முடிவு செய்திருக்கிறார். 

என்னிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்கு முறையான காரணத்தை தேடியவர் சமீபத்தில் எனது ஆரோக்கியத்துக்காக சத்து ஊசி போடவேண்டும் என அழைத்துச் சென்று ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்ட ரத்தத்தை எனக்கு செலுத்தியிருக்கிறார். சமீபத்தில் மருத்துவமனையில் மேற்கொண்ட ஒரு மருத்துவ பரிசோதனையில் தான் எனக்கு ஹெச்.ஐ.வி இருப்பதே தெரியவந்தது. எனக்கு வேண்டுமென்றே ஹெச்.ஐ.வி பாதித்த ரத்தத்தை செலுத்தி, எனக்கும் என் குழந்தையின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்திய என் கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த புகாரில் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து சரணைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்ப்பிணி மனைவிக்கு ஹெச்ஐவி பாதித்த ரத்தத்தை செலுத்திய கொடூர கணவன்! Reviewed by Author on December 18, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.