அண்மைய செய்திகள்

recent
-

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் தொன் லித்தியம் உலோகப் படிமம் கண்டுபிடிப்பு

இந்திய மாநிலமான ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் தொன் லித்தியம் (Lithium) உலோகப் படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை இந்தி மத்திய சுரங்க அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. கையடக்கத் தொலைபேசிகள் முதல் மின்சார கார்கள் வரை அனைத்திலும் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகளின் உற்பத்திக்கு முக்கியமான அரிய கனிமமாக லித்தியம் உள்ளது. Reasi மாவட்டத்தின் Salal-Haimana பகுதியில் பெருந்தொகையான இந்த லித்திய படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த லித்தியத்தைக் கொண்டு நாட்டின் மின்சாரக் கார்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் இந்தியாவின் இலக்கை எட்ட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 அவுஸ்திரேலியா, அர்ஜென்டினா மற்றும் சிலியில் இருந்தே இதுவரை லித்தியம் பெருமளவில் வெட்டியெடுக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய லித்திய படிமமாக 21 மெட்ரிக் தொன் லித்தியம் பொலிவியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தற்போது இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை விட நான்கு மடங்கு அதிகம். முன்னதாக இந்தியாவின் தென் மாநிலமான கர்நாடகாவில் சிறிய அளவில் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இந்தியா தற்போது மின்சார வாகன உற்பத்தி மற்றும் பயன்பாடுகளை ஊக்குவித்து வருகிறது. 2030 ஆண்டுகளுக்குள் அனைத்து இடங்களிலும் மின்சார வாகன பயன்பாட்டை கொண்டு வரவேண்டும் என்ற நோக்கில், பல்வேறு சலுகைகளையும் திட்டங்களையும் வகுத்து வருகிறது.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் தொன் லித்தியம் உலோகப் படிமம் கண்டுபிடிப்பு Reviewed by Author on February 11, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.