அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற மாசி மக உற்சவம்.

மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள பாடல் பெற்ற திருத்தலமான திருக்கேதீச்சர ஆலயத்தில் மாசி மக உற்சவம் நேற்றைய தினம் திங்கட்கிழமை(6) சிறப்பாக இடம்பெற்றது. திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருணானந்த குருக்கள் தலைமையில் நடைபெற்றது.

 இதன் போது நேற்று அதிகாலை திரு வானந்தலைத் தொடர்ந்து எம்பெருமான் கௌரி அம்மை உடனாய திருக்கேதீச்சரப் பெருமானுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலை சாந்திப் பூஜை வசந்த மண்டப பூஜை வழிபாட்டுடன் சுவாமி எழுந்தருளி தீர்த்த உற்சவத்தை மகிமையுறச் செய்ய பாலாவி தீர்த்தகரை புறப்பட்டு தீர்த்த பூஜையுடன் திருவிழா சிறப்புற நிறைவு பெற்றது.








மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற மாசி மக உற்சவம். Reviewed by Author on March 07, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.