அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பள்ளிமுனை பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு .

மன்னார் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில்  முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (12) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில்  மன்னார் பள்ளிமுனை பெருக்க மரத்துக்கு முன்பாக இடம் பெற்றது.


இதன் பொழுது மன்னார் மாவட்டத்தில் யுத்த காலத்தில் தங்கள் பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள்  முப்படையினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்கள் உறவினர்களால் இணைந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது.

பள்ளிமுனை பங்கு தந்தை,உதவி பங்குதந்தை பொதுமக்கள்,இளைஞர்கள் யுவதிகள் உட்பட
அதிகளவான மக்கள் உணர்வுபூர்வமாக கலந்து கஞ்சியை அருந்தி சென்றமை குறிப்பிடத்தக்கது.
12/05/2023









மன்னார் பள்ளிமுனை பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு . Reviewed by NEWMANNAR on May 12, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.