அண்மைய செய்திகள்

recent
-

புதிய உத்தியோகபூர்வ அரச பங்களாவிற்கு மாறினார் கோட்டா !!

 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது ஸ்டான்மோர் கிரசென்ட்டில் உள்ள உத்தியோகபூர்வ அரச பங்களாவிற்கு குடிபெயர்ந்துள்ளதாக சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த பங்களா முன்னர் மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்ததோடு, பாதுகாப்புப் படை பிரதானி மற்றும் விமானப் படைத் தளபதி ஆகியோரின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ளது.

இந்த பங்களா முதலில் வெளிவிவகார அமைச்சருக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அமைச்சர் அலி சப்ரியின் ஒப்புதல் கிடைத்த நிலையில்

பங்களாவை ஒதுக்குவதற்கு அரசாங்கத் தலைவர்கள் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியின் ஒப்புதலைப் பெற வேண்டும், ஏனெனில் இது கோட்டாபய ராஜபக்ஷவின் பயன்பாட்டிற்காக குடியிருப்பு விடுவிக்கப்பட்டது.

முன்னர் அவர் வசித்துவந்த குடியிருப்பில் அதிக சத்தம் ஏற்படுவதாகவும் இதனை காரணமாக கொண்டு முன்னாள் ஜனாதிபதி மிகவும் அமைதியான சூழலைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

இடமாற்றம் செய்யப்பட்ட போதிலும், கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்ட அதே விரிவான பாதுகாப்பு தொடர்ந்தும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


புதிய உத்தியோகபூர்வ அரச பங்களாவிற்கு மாறினார் கோட்டா !! Reviewed by Author on June 04, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.