அண்மைய செய்திகள்

recent
-

தமிழ்நாட்டு முகாம்களில் “நாடற்றவர்களாக” இருப்பவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப் பரிந்துரை

 இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக மலையக மக்கள் தொடர்பான மூன்று அமர்வுகள் இடம்பெற்றன. தாயகம் திரும்பியோர் அமர்வு, மலையகத் தமிழர் அமர்வு மற்றும் ஏதிலியர் அமர்வு என் அவை வகைப்படுத்தப்பட்டிருந்தன.


மலையகத் தமிழர்கள் தொடர்பான அமர்வில் இலங்கையில் வந்திருந்த பிரதிநிதிகள் பங்கேற்று இங்கிருக்கும் இருக்கும் பிரச்சினைகள், தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், சமூகப் பொருளாதார சவால்கள் ஆகியவை குறித்து அரங்கில் விளக்கமளித்தனர்.

ஏதிலியர்கள் தொடர்பான அமர்விற்கு பேராசிரியர் இரா. இளம்பரிதி தலைமையேற்று, தமிழ்நாட்டின் அகதிகள் முகாம்களில் உள்ளவர்கள் தொடர்பில் தாங்கள் நடத்திய ஆய்வு குறித்து விளக்கமளித்தார்.

இந்த அமர்வுகளில் 1964ஆம் ஆண்டு “தீய எண்ணத்துடன்” உருவாக்கப்பட்ட சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் தொடர்பில்  பேசப்பட்டது. அந்த உடன்படிக்கை எப்படி இந்த மக்களைப் பிளவுபடுத்தி, பெருந்தொகையான எண்ணிக்கையினரை இந்தியாவிற்கு அனுப்பி, குடும்பங்கள் மற்றும் உறவுகளைப் பிரித்து மீள முடியாத துயரத்தை ஏற்படுத்தியது என அவையோருக்கு விளங்கப்படுத்தப்பட்டது.

மலையக, தாயகம் திரும்பிய தமிழருக்கான இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாட்டில் 11 தீர்மானங்கள் வாசித்து நிறைவேற்றப்பட்டன. அதில் முதன்மையாக பொறுப்புக்கூறல் இடம்பெற்றிருந்தது.

“200 வருடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு கூலித் தொழிலாளர்களாகக் கொண்டு செல்லப்பட்ட மக்கள், இன்று இலங்கையில் மலையகத் தமிழர்களாகவும், இந்தியாவில் தாயகம் திரும்பியோராகவும், தமிழ்நாட்டில் ஏதிலிகளாகவும் சிதறிக்கிடக்கின்றனர். இப்படி சிதறடிக்கப்பட்டமைக்கு இலங்கை அரசும், இந்திய மத்திய அரசும் பிரித்தானிய அரசும் பொறுப்புக்கூற வேண்டும்” என்பது முதல் தீர்மானம்.

மலையகத் தமிழர்கள் தனியொரு சமூகமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என மற்றுமொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. “மலையகத் தமிழர்கள் ஒரு தனித்த மக்கள் சமூகம் என இலங்கை அரசு சட்டவகையில் அங்கீகரிக்க வேண்டும். கடந்த 200 ஆண்டுகளில் ஆங்கிலேய அரசால் பல்வேறு வேலைகளில் ஈடுபடுவதற்காக இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்ட தமிழர்கள் அனைவரும் மலையகத் தமிழர்களாக வரையறுக்க வேண்டும்”.

இலங்கையில் ஆட்சிமுறை மாற்றி அமைக்கப்பட வேண்டும் என மற்றொரு தீர்மானம் வலியுறுத்தியது.
“இலங்கையின் ஒற்றையாட்சி அரசமைப்பை மாற்றி, ஒரு கூட்டாட்சி ஏற்பாட்டின் முலம் தம்மைத் தாமே நிர்வகித்துக் கொள்ளும் வகையில் மலையகத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்”.

மலையகத்தில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டுமென மற்றொரு தீர்மானத்தின் மூலம் கோரப்பட்டது. “பெருந்தோட்ட பொருளாதார மேம்பாட்டை மையமாக கொண்டு மலையகத்தில் மலையகப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும்.”

“மலையக மக்களுக்கு காணி உரிமையும், வீட்டு உரிமையும் வழங்குவதற்கு இலங்கை அரசு முன்வர வேண்டும்.”

அந்த மாநாட்டின் முதல் தீர்மானத்தில் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு இந்திய, இலங்கை, பிரித்தானிய அரசுகள் பொறுப்புக்கூற வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில், கடைசி தீர்மானத்தில் அதே அரசுகள் பொருளாதார உதவிகளைச் செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டது. “இலங்கையில் உள்ள ஏனைய இனச் சமூகங்களைவிட அனைத்து வகையிலும் பின் தங்கியுள்ள மலையக மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த பொருளாதார உதவிகள் வழங்குவதற்கு இலங்கை, இந்திய, பிரித்தானிய அரசுகள் முன்வர வேண்டும்”.

இந்த ஆண்டு ஜூன் மாதம் திருச்சி மாநகரில் இதே போன்றதொரு மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டிலும், மலையக மக்கள் பிளவுபட்டு இந்தியா இலங்கையில் வாழ்வது, அவர்கள் அனுபவிக்கும் துயரங்கள், சமூகப் பொருளாதார பின்னடைவுகள், பல தசாப்தங்களாக வேலை வாய்ப்புகள் மற்றும் சொத்துக்களை இழந்து துன்புறுவது ஆகியவற்றிற்காக, இந்தியா, இலங்கை மற்றும் பிரித்தானிய அரசுகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். அவர்களால் 200 ஆண்டுகளாக இழைக்கப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு இந்த மூன்று நாடுகளும் அந்த நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








தமிழ்நாட்டு முகாம்களில் “நாடற்றவர்களாக” இருப்பவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப் பரிந்துரை Reviewed by Author on October 26, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.