அண்மைய செய்திகள்

recent
-

பாடசாலை, வர்த்தக நிலையங்களுக்குள் புகுந்த வெள்ளம்! வாய்க்காலினை சீர் செய்யும் பணியில் அரச திணைக்களத்தினர்.

 முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தொடர்ச்சியாக பெய்த கன மழையால் வீதிகளில் நீர் தேங்கி நின்று வர்த்தக நிலையங்கள் பாடசாலை , வீடுகளுக்குள் புகுந்தமையால் மக்களின் அன்றாட செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்தது.


தற்பாெழுது  நிலவும் சீரற்ற காலநிலையால் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. இதனால் புதுக்குடியிருப்பு நகரில் பாரிய அளவில் நீர் தேங்கி பாரிய அழிவுகளை அப்பகுதிசார் வர்த்தகர்களிற்கு, பாடசாலைகளிற்கு, மக்களிற்கு ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளும், வர்த்தகர்களும், அப்பகுதி மக்களும்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து தக்க நேரத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தினர், புதுக்குடியிருப்பு பிரதேச சபையினர், பொலிஸார் இணைந்து புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வாய்க்காலினை நீர் வடிந்து ஓடும்படி சீர் செய்து வருகின்றமையும் குறிப்பிடதக்கது.









பாடசாலை, வர்த்தக நிலையங்களுக்குள் புகுந்த வெள்ளம்! வாய்க்காலினை சீர் செய்யும் பணியில் அரச திணைக்களத்தினர். Reviewed by Author on November 17, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.