அண்மைய செய்திகள்

recent
-

நீர்த்தேக்கத்திற்கு சென்ற இளம் யுவதிக்கு நேர்ந்த பரிதாபம்

 வவுனியா - பாவற்குளம் நீர்த்தேக்கத்திற்கு சென்ற இளம் யுவதியொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

பாவற்குளம் நீர்த்தேக்கமானது வான் பாய்ந்து வரும் நிலையில் குறித்த குளத்திற்கு நேற்று இளைஞர் ஒருவருடன் இளம் யுவதியொருவர் சென்றுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் நீர்த்தேக்க பகுதியில் நின்று கொண்டிருந்த யுவதி நீரில் விழுந்துள்ள நிலையில் உடனடியாக விரைந்து செயற்பட்ட சிலர் யுவதியை மீட்டு, பாவற்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

எனினும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன்னரே குறித்த யுவதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து யுவதியின் சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இன்று மதியம் குறித்த சடலத்தை பார்வையிட்ட வவுனியா பதில் நீதவான் தி.திருஅருள், விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.

மரணம் சம்பவித்த காரணம்

அத்துடன் குறித்த மரணமானது யுவதி நீரில் மூழ்கியமையால் ஏற்டபட்டது என தெரிவித்துடன், உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைக்க கட்டளையிட்டார்.

சம்பவத்தில் நாகர்இலுப்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் உளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 



நீர்த்தேக்கத்திற்கு சென்ற இளம் யுவதிக்கு நேர்ந்த பரிதாபம் Reviewed by வன்னி on December 22, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.