மன்னார் மாவட்ட கடற் தொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சங்கு,அட்டை பிடிப்பதற்கான தடையை நீக்குமாறு மீனவர்கள் கோரிக்கை.-படங்கள் இணைப்பு
மன்னார் மாவட்டத்தில் கடற் தொழிலில் ஈடுபடும் மீணவர்கள் தமக்கு விதிக்கப்பட்டுள்ள சங்கு மற்றும் அட்டை பிடிப்பதற்காண தடையை உடன் நீக்குமாறு மீனவர்கள் உரிய தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார் தீவில் உள்ள அதிகலவான மக்கள் கடல் தொழிலை தமது வாழ்வாதாரத் தொழிலாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
வட கீழ் பருவக்காற்று காலமான ஒக்டோபர் தொடக்கம் மார்ச் வரையிலான 6 மாதங்கள் கடல் அட்டை,சங்கு தொழில் புரியும் காலமாகும்.
இத்தொழிலை பள்ளிமுனை கிராம மீனவர்கள் உற்பட சில கிராம மீனவர்கள் பரம்பரை பரம்பரையாக இக்காலங்களில் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
-தற்பொழுது இத் தொழில் காலங்களில் அனைத்து மீனவர்களும் இத் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.ஆனால் அட்டை,சங்கு தொழில் புரிவது தடை செய்யப்பட்டுள்ளது என மன்னார் கடற்தொழில் அலுவலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக சங்கங்களுக்கு கடிதம் மூலம் எதுவித அறிவித்தல்களும் கடற்தொழில் திணைக்களத்தினால் அறிவிக்கப்படவில்லை.
-ஆனால் இக்கடலுணவுகளை கொள்வனவு செய்யும் வெளிமாவட்ட முதளாளிமார்களுக்கு கடற்தொழில் அலுவலகத்தினால் தொழில்காரர்களைக் கொண்டு இத் தொழில் புரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது சம்மந்தமாக கடற்தொழில் பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது தலைமைக்காரியாலய உத்தரவின் பெயரிலேயே வழங்கியதாக எமக்கு அறிவித்துள்ளனர்.
-பரம்பரை பரம்பரையாக இத் தொழிலை மேற்கொண்டு வரும் எமது மீனவர்கள் இத் தொழில் புரிய தடைவிதிக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி ஏனைய வெளிமாவட்ட மீனவர்களுக்கு சிலின்டர் பாவீத்து இத் தொழிலை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும்.
'ஒரேநாடு ஒரே இனம்'என்ற தங்களின் கூற்றுப்படியும் தற்பொழுது தங்களது ஆட்சிக்காலத்தில் நாடு பல அபிவிருத்தி அடைந்து வரும் இவ்வேளையிலும் இதே நாட்டில் வாழும் எமக்கு இத்தொழில் தடைவிதிக்கப்பட்டு ஏனையோருக்கு அனுமதி வழங்கி வருவது எவ்விதத்தில் நியாயமானதாகும்,????எமக்கு வருடத்தில் 6 மாதங்கள் மட்டுமே தொழில் காலமாகும்.
அதுவும் இம்மாதங்களிலேயே இத் தொழிலை செய்ய முடியும்.தற்பொழுது எமக்கு இத் தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாலும் தொழிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் வெளி மாவட்ட மீனவர்கள் எமது கண் முன்பே இத் தொழிலை சுதந்திரமாக செய்து வருவதினாலும் எமது மீனவர்கள் பல வித உளவியல் தாக்கங்களுக்கு உள்ளாவதுடன் தமது நாளாந்த சீவனோபாயத்தை கொண்டு நடத்துவது கேள்விக்குறியாகவுள்ளது.
எனவே இவ்விடையத்தில் இத்தொழிலை மேற்கொள்ளுவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு எமது மீனவர்களின் வாழ்வாதார நிலை மேம்பட மன்னார் மாவட்டத்தில் சங்கு,அட்டை பிடிப்பதற்காண அனுமதியை வழங்க உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார் இணையத்தள நிருபர்
மன்னார் தீவில் உள்ள அதிகலவான மக்கள் கடல் தொழிலை தமது வாழ்வாதாரத் தொழிலாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
வட கீழ் பருவக்காற்று காலமான ஒக்டோபர் தொடக்கம் மார்ச் வரையிலான 6 மாதங்கள் கடல் அட்டை,சங்கு தொழில் புரியும் காலமாகும்.
இத்தொழிலை பள்ளிமுனை கிராம மீனவர்கள் உற்பட சில கிராம மீனவர்கள் பரம்பரை பரம்பரையாக இக்காலங்களில் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
-தற்பொழுது இத் தொழில் காலங்களில் அனைத்து மீனவர்களும் இத் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.ஆனால் அட்டை,சங்கு தொழில் புரிவது தடை செய்யப்பட்டுள்ளது என மன்னார் கடற்தொழில் அலுவலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக சங்கங்களுக்கு கடிதம் மூலம் எதுவித அறிவித்தல்களும் கடற்தொழில் திணைக்களத்தினால் அறிவிக்கப்படவில்லை.
-ஆனால் இக்கடலுணவுகளை கொள்வனவு செய்யும் வெளிமாவட்ட முதளாளிமார்களுக்கு கடற்தொழில் அலுவலகத்தினால் தொழில்காரர்களைக் கொண்டு இத் தொழில் புரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது சம்மந்தமாக கடற்தொழில் பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது தலைமைக்காரியாலய உத்தரவின் பெயரிலேயே வழங்கியதாக எமக்கு அறிவித்துள்ளனர்.
-பரம்பரை பரம்பரையாக இத் தொழிலை மேற்கொண்டு வரும் எமது மீனவர்கள் இத் தொழில் புரிய தடைவிதிக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி ஏனைய வெளிமாவட்ட மீனவர்களுக்கு சிலின்டர் பாவீத்து இத் தொழிலை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும்.
'ஒரேநாடு ஒரே இனம்'என்ற தங்களின் கூற்றுப்படியும் தற்பொழுது தங்களது ஆட்சிக்காலத்தில் நாடு பல அபிவிருத்தி அடைந்து வரும் இவ்வேளையிலும் இதே நாட்டில் வாழும் எமக்கு இத்தொழில் தடைவிதிக்கப்பட்டு ஏனையோருக்கு அனுமதி வழங்கி வருவது எவ்விதத்தில் நியாயமானதாகும்,????எமக்கு வருடத்தில் 6 மாதங்கள் மட்டுமே தொழில் காலமாகும்.
அதுவும் இம்மாதங்களிலேயே இத் தொழிலை செய்ய முடியும்.தற்பொழுது எமக்கு இத் தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாலும் தொழிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் வெளி மாவட்ட மீனவர்கள் எமது கண் முன்பே இத் தொழிலை சுதந்திரமாக செய்து வருவதினாலும் எமது மீனவர்கள் பல வித உளவியல் தாக்கங்களுக்கு உள்ளாவதுடன் தமது நாளாந்த சீவனோபாயத்தை கொண்டு நடத்துவது கேள்விக்குறியாகவுள்ளது.
எனவே இவ்விடையத்தில் இத்தொழிலை மேற்கொள்ளுவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு எமது மீனவர்களின் வாழ்வாதார நிலை மேம்பட மன்னார் மாவட்டத்தில் சங்கு,அட்டை பிடிப்பதற்காண அனுமதியை வழங்க உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார் இணையத்தள நிருபர்
மன்னார் மாவட்ட கடற் தொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சங்கு,அட்டை பிடிப்பதற்கான தடையை நீக்குமாறு மீனவர்கள் கோரிக்கை.-படங்கள் இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
September 03, 2012
Rating:

No comments:
Post a Comment