அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் காணி தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டம்.


மாகாண காணி ஆணையாளர் திணைக்கத்தினால் காணி தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிக்கும்  அவசர கூட்டம் ஒன்று இன்று புதன் கிழமை காலை மன்னார் பிரதேச செயலகத்தில் மாகாண உதவி காணி ஆணையாளர் கைலாசநாதன் மகேஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது.

-இதன் போது அரச காணிகளை மக்கள் அபகரிக்கின்றமை,காணி இல்லாத குடும்பங்களின் பிரச்சினைகள், பாதுகாப்பு தேவைகளுக்காக அரச காணிகள் பயண்படுத்தப்படுகின்றமை உற்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

 இதன் போது மன்னார் நகர காணி ஆணையாளர் திணைக்கள பணியாளர்கள்,மன்னார் பிரதேசச் செயலாளர்,கிராம சேவையாளர்கள்,கிராம மக்களின் பிரதி நிதிகள்,மாதர்,கிராம அபிவிருத்திச்சங்க பிரதி நிதிகள்,பட்டதாரி பயிலுனர்கள்,பொது மக்கள் உற்பட நூற்றுக்கணக்காணவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் காணி தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டம். Reviewed by NEWMANNAR on March 06, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.