அண்மைய செய்திகள்

recent
-

தமிழ்,முஸ்லிம் மக்களே விழிப்பாய் இருங்கள் (கே.சி.எம்.அஸ்ஹர்)


வடக்குக் கிழக்குப்பகுதிகளில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களின்  ஒற்றுமையையும்.உறவையும் சீர்குலைக்க ,அநாமதேய துண்டுப்பிரசுரங்கள் அடிக்கடி வெளியிடப்பட்டுக்கொண்டிருக்கின்றன.தமிழ் முஸ்லிம் ,உறவைப்பொறுத்துக்கொள்ளாத சில சுயநலவாதக்குழுக்களின் நடவடிக்கைகளே இதுவாகும்.கடந்த காலங்களில் தமிழ் முஸ்லிம் உறவைக் குலைத்து இலாபம் பெற்ற குழுக்களே இவையாகும் .தமிழ் முஸ்லிம் ஒற்றுமை மூலம் இக்குழுக்களை விரட்டியடிப்போம்.


எள்ளாளன் படை,இராவணன் சேனை ,திராவிட சேனை,எல்லாச் சேனைகளும் முஸ்லிம்களின் பொருளாதாரத்தைக் குறிவைப்பது போலத்தோன்றுகிறது.இன்னும் எத்தனை?.... ஹாட்போட் படையணிகள் வெளிவருமோ? தெரியாது.இலங்கையில் இல்லாத புதிய புதிய குழுக்களின் அநாமதேயப் பெயர்களில் துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டு தமிழ்,முஸ்லிம் உறவைச்சீர்குலைக்கச்சதி நடக்கிறது.எச்சரிக்கையாக இருப்போம்...
கடந்த காலங்களில் இழந்தவை போதும் .எமக்குள் இன்னுமொரு முரண்பாடு ஏற்பட்டால் அதைத்தாங்கிக் கொள்ள எம் இரு சமூகங்களும் தயாரில்லை.தமிழ்,முஸ்லிம் அரசியல் தலைவர்களே! சுமயத்தலைவர்களே! புத்திஜீவிகளே!ஊடகவியலாளர்களே!தஊடகநிறுவனங்களே!கழகங்களே!அனைவரும் விழிப்பாய் இருங்கள். மக்களையும் வழிப்படையச்செய்யுங்கள்.
தமிழ்,முஸ்லிம் மக்களே விழிப்பாய் இருங்கள் (கே.சி.எம்.அஸ்ஹர்) Reviewed by NEWMANNAR on April 03, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.