அண்மைய செய்திகள்

recent
-

முத்தரிப்புத்துறை கிராமத்திற்கு அபிவிருத்திகளை மேற்கொள்ளுமாறு கோரி மகஜர் கையளிப்பு.

முத்தரிப்புத்துறை கிராமத்தில் முசலி பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக முசலி பிரதேச பிரஜைகள் குழுவினால் முத்தரிப்புத்துறை கிராமத்தில் அமைக்கப்பட்ட சமாதனத்தின் இராக்கினி பெண்கள் தலமைத்துவக் குழு கிராமத்தில் காணப்படும் சில முக்கியமான தேவைகளை மையப்படுத்தி  கடந்த 29 ஆம் திகதி   மனு ஒன்றினை முசலி பிரதேச சபை தலைவரிடம் ஒப்படைத்துள்ளதாக முசலி பிரதேச பிரஜைகள் குழுவின் அமைப்பாளர் அ.சுனேஸ்.சோசை தெரிவித்தார்.


இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

இந்த கிராம மக்கள் 2007ம் நடைபெற்ற யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து நானாட்டான் கிராமத்தில் வாழ்ந்து வந்தார்கள்.மீண்டும் அவர்கள் தங்களின் சொந்த இடத்திற்கு 2009ம் ஆண்டு சென்று குடியேறினார்கள்.

அன்று தொடக்கம் பல பிரச்சினைகளுக்கு மக்கள் முகம் கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். பின்னர் முசலி பிரதேச சபை மீண்டும் சரியான முறையில் புத்துயிர் பெற்று சரியான முறையில் இயங்கத் தொடங்கியதால் இக் கிராமத்திற்கு சில அடிப்படை தேவைகளை முசலி பிரதேச சபைக்கு ஊடாக பெற்றுக்கொடுக்கக் கூடியதாக அமைந்தது.

இவ் விடயம் ஒரு பக்கத்தில் மகிழ்ச்சியை அளித்தாலும் மறுபக்கத்தில் மக்கள் இன்னும் சில முக்கியமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக்கொண்டு இருப்பதை எம்மால் உணர முடிக்கின்றது.

 பல தடவைகள் கிராமத்தில் காணப்படும் அமைப்புக்கள் ஊடாக கடிதங்கள் கொடுக்கப்பட்டும் இன்னும் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமை எமக்கு வேதனை அளிக்கின்றது.

குறிப்பாக எமது கிராமத்தில் காணப்படும் பிரச்சினைகளை மையப்படுத்திப்பார்க்கும் போது 550 குடும்பத்திற்கு மேலாக குடும்பங்கள் காணப்படுகின்றன. இவர்கள் அனைவரும் கடற்றொழில் மற்றும் விவசாயம் இன்னும் ஒரு சிலர் அன்றாடம் கூலி தொழில் செய்து தங்களின் குடும்பங்களை வழி நடத்துபவர்களாக காணப்படுகின்றனர்.

இருந்த போதிலும் இங்கு வாழும் குடும்பங்களில் பலர் ஆயுள் மருத்துவத்தினை நம்பி தங்களின் மருத்தவ தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு வந்தார்கள்.

இவ் ஆயுள் வைத்தியசாலை ஆனது முசலி பிரதேச சபை கட்டிடத்திலேயே இயங்கிவந்தது. 2007ம் ஆண்டு யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து  மீண்டும் 2009ம் அண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்டதன் பிற்பாடு 1கிழமையில் 2 தடவைகள் அரிப்பிற்கு வந்து நடமாடும் மருந்துவ சேவையினை நடாத்தி வந்தார்கள்.

அனால் தற்போது சில ஆண்டுகளாக இவ் வைத்தியசாலை ஆனது பொற்கேணி கிராமத்திற்கு இடம் மாற்றப்பட்டுள்ளது. இதனால் நோயாளர்களாக காணப்படும் பல நோயாளிகள் அங்கு சென்று மருந்தினை எடுப்பதற்கு மிகவும் கஸ்ரப்பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். தலைவர் அவர்களே! நோயாளிகளின் மனதினை கருத்தில் கொண்டு கிழமையில் 2 தடவைகள் அரிப்பு கிராமத்தில் இந்த ஆயள் மருந்தினை நடமாடும் சேவையின் மூலம் வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு தரும்படியாக கேட்டுக் கொள்ளுகின்றோம்.

அன்றாடம் மக்களாகிய நாம் எமது வீடுகளில் காணப்படும் சிறிய சிறிய கழிவுகளை வெட்டி பசளை ஆக்கி வருக்கின்றோம். இருந்தாலும் அற்போது கழிவு பொருட்கள் ஏராளமாக எமது கிராமத்தை அசிங்கப்படுத்திக்கொண்டு இருக்கின்ற நிலை காணப்படுகின்றது. காரணம் குப்பைகளை கொட்டுவதற்குரிய சரியான இடம் இல்லமையும் குப்பைகளை பிரதேச சபையினால் வந்து சேகரிக்கப்படாமையும் இதற்கான காரணமாக இருக்கின்றது. தலைவர் அவர்களே! எமது கிராமத்தில் காணப்படும் குப்பை கூழங்களை வாரத்தில் 1நாளாவது வந்து இவற்றை சேகரிப்பதற்கேற்ற வசதியினை செய்து தருமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.

2009ம் அண்டிற்கு பிற்பாடு எமது பிரதேச சபையானது மிகவும் சிறப்புடன் செயலாற்றி வருகின்றது. அத்தோடு பல தரப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் மற்றும் கிராமத்தில் காணப்படும் சில அடிப்படை பிரச்சினைகளையும் தீர்த்துவந்துள்ளமை நாம் கண்ட உண்மை. அனாலும் எமது கிராமத்தை பொறுத்த வரையில் 550 குடும்பங்களுக்கு மேல் காணப்படுகின்றார்கள். பல தரப்பட்ட உள்ளுர் வீதிகள் காணப்படுகின்றது. இருந்தாலும் வீதிகளுக்கான தெரு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் பல விளக்குகள் குறுகிய காலத்தினுள் பழுதடைவதை காணமுடிகின்றது,பழுதடைந்தும் காணப்படுகின்றன.

அத்தோடு பொருத்தப்பட்டுள்ள தெரு விளக்குகள் போதாமையாகவும் காணப்படுகின்றது. இதனால் இரவு வேளைகளில் வன விலங்குகளின் அட்டகாசம் (யானை,பன்றி) கிராமத்தினுள் நுழைந்து பல சேதங்களை எற்படுத்துவதனையும் போக்குவரத்து சிரமங்களையும் எதிர்நோக்கக் கூடியதாக இருப்பதனையும் எம்மால் உணர முடிகின்றது.

தலைவர் அவர்களே! கிராமத்தில்  காணப்படும் தெரு விளக்கு பிரச்சினை சம்பந்தமாக எமது கிராமத்திற்கு தேவையான தெருவிளக்குகளை பொருத்தி தருமாறும் பழுதடைந்து காணப்படும் தெரு விளக்குகளை மாற்றி புதிதாக தெருவிளக்குகளை இட்டு தருமாறும் சமாதானத்தின் இராக்கினி பெண்கள் தலமைத்துவக் குழு முத்தரிப்புத்துறை சார்பாகவும் கேட்டுக்கொள்ளுகின்றோம் என குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் குறித்த மகஜரை  முத்தரிப்புத்துறை சமாதானத்தின் இராக்கினி பெண்கள் தலமைத்துவக் குழு தலைவி சுசிலா வழங்கி வைத்துள்ளதாக முசலி பிரதேச பிரஜைகள் குழு வின் அமைப்பாளர் அ.சுனேஸ்.சோசை மேலும தெரிவித்தார்.
முத்தரிப்புத்துறை கிராமத்திற்கு அபிவிருத்திகளை மேற்கொள்ளுமாறு கோரி மகஜர் கையளிப்பு. Reviewed by Admin on June 03, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.