வடக்குத்தேர்தலில் 114,488 பேர் வாக்களிப்பதற்கு தகுதி
வடமாகாண சபைத்தேர்தலில் வாக்களிப்பதற்கு சுமார் 7 இலட்சத்து 14 ஆயிரத்து 488 பேர் தகுதிபெற்றுள்ளதாக வட மாகாண தேர்தல் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வட மாகாண சபைக்கான தேர்தல் செப்டம்பர் 07ஆந் திகதி நடாத்தப்படலாமென்ற எதிர்ப்பார்ப்பில் தேர்தலை நடாத்துவதற்குரிய சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் 38 மாகாண சபை உறுப்பினர்களைக் கொண்ட சபையாக வட மாகாண சபை அமையுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
வாக்காளர் இடாப்பின் அடிப்படையின் யாழ்.மாவட்டத்தில் 4 இலட்சத்து 26 ஆயிரத்து 703 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 68 ஆயிரத்து 589 பேரும் வவுனியா மாவட்டத்தில் 96 ஆயிரத்து 702 பேரும் மன்னார் மாவட்டத்தில் 70 ஆயிரத்து 85 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 52 ஆயிரத்து 409 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
வடக்குத்தேர்தலில் 114,488 பேர் வாக்களிப்பதற்கு தகுதி
Reviewed by NEWMANNAR
on
June 19, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
June 19, 2013
Rating:

No comments:
Post a Comment