அண்மைய செய்திகள்

recent
-

இடம்பெயர்ந்தவர்களில் 4,989 பேர் வடக்கில் வாக்களிக்க தகுதி

இடம்பெயர்ந்தவர்களில் 4,989 பேர் வடக்கில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம் மொஹமட் தெரிவித்தார்.

 நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு அமைவாகவே அவர்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். 2012 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்புக்கு மேலதிகமாக இடம்பெயர்ந்தவர்களுக்கான இடாப்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 இந்த 4,989 பேரும் வட மாகாண சபைத்தேர்தலின் போது வாக்களிக்க முடியுமென்றும் அவர் தெரிவித்தார். வடக்கில், இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கான இடாப்பை தயாரிப்பதற்கான பட்டியலை தயாரிப்பதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டபோது 10,243 விண்ணப்பங்கள் கிடைத்தன.

 பல்வேறு காரணங்களுக்கான 3,842 விண்ணப்பங்களும் 2012 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் பெயர் உள்ளீர்க்கப்பட்டிருந்த 1,412 பேரின் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுவிட்டன என்றும் அவர் தெரிவித்தார்.

 வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ள 4,989 பேரில் 3,135 பேர் மன்னார் மாவட்டத்திலும், 1318 பேர் முல்லைத்தீவு மாவட்டத்திலும், வவுனியா மாவட்டத்தில் 370 பேரும் கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்டங்களிலிருந்து 166 பேரும் தகுதிபெற்றுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்


இடம்பெயர்ந்தவர்களில் 4,989 பேர் வடக்கில் வாக்களிக்க தகுதி Reviewed by Admin on July 16, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.