நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 07 பாடசாலைகளுக்கு 5000 பாடசாலைகள் அபிவிருத்தி செயல் திட்டத்தின் மிகுதி பணம் வழங்கப்படவில்லை என விசனம்.
குறித்த செயல் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு 5 இலட்சம் ரூபாய் செலவில் கட்டிடம் அமைப்பதற்கானஅனுமதி வழங்கப்படது.ஆரம்பத்தில் 1 இலட்சம் ரூபாய் பணம் வழங்கப்பட்டது.மிகுதி 4 இலட்சம் ரூபாய் பணம் நிர்மாணப்பணிகள் அனைத்தும் முடிவடைந்த பின் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் குறித்த செயல் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட சகல பாடசாலைகளின் வேலைத்திட்டமும் முடிவடைந்த நிலையில் குறித்த பாடசாலைகளுக்கு பொறுப்பான பிரதேசச் செயலகம் மிகுதி கொடுப்பனவை வழங்கியுள்ளது.
எனினும் நானாட்டான் பிரதேசச் செயலகத்திற்கு உற்பட்ட குறித்த 7 பாடசாலைகளுக்குமான மிகுதி கொடுப்பனவை இது வரை நானாட்டான் பிரதேசச் செயலகம் வழங்காத நிலையில் உள்ளது.
குறித்த மிகுதி பணத்தின் காசோலையை பெற்றுக்கொள்ள குறித்த பாடசாலைகளின் அதிபர்கள் நாளாந்தம் நானாட்டான் பிரதேசச் செயலகத்திற்கு சென்று ஏமாந்து வருவதாக குறித்த பாடசாலைகளின் அதிபர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நானாட்டான் பிரதேசச் செயலாளர் ஐ.சந்திரையா அவர்களை தொடர்பு கொண்ட போதும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 07 பாடசாலைகளுக்கு 5000 பாடசாலைகள் அபிவிருத்தி செயல் திட்டத்தின் மிகுதி பணம் வழங்கப்படவில்லை என விசனம்.
Reviewed by Admin
on
July 16, 2013
Rating:

No comments:
Post a Comment