இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட முன்னாள் போராளி
தேவா சதீஸ்குமார் என்கின்ற 35 வயதுடைய முன்னாள் புலி உறுப்பினராக இருந்த இளைஞனே இவ்வாறு மும்பை குற்றத்தடுப்பு பிரிவினரால் இலங்கை பாதுகாப்பு தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் மும்பையில் இருந்து நைரோபிக்கு செல்ல முயற்சித்த போதே கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தான் விமானம் மூலம் இலங்கையில் இருந்து இந்தியா வந்ததாக அவர் தெரிவித்த போதும் அவர் படகு மூலமே இந்தியா சென்றிருந்தமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்தே அவர் நாடு கடத்தப்பட தீர்மானிக்கப்பட்டதாக மும்பை குற்றத்தடுப்பு பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டதாக மேலும் இந்த இணையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட முன்னாள் போராளி
Reviewed by Admin
on
August 02, 2013
Rating:
No comments:
Post a Comment