அண்மைய செய்திகள்

recent
-

அகில இலங்கை இந்து மாமன்றத்தினால் பல்கலை மாணவர்களுக்கு மடிக்கணணிகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மேலும் ஒரு தொகுதி மாணவர்களுக்கு அகில இலங்கை இந்து மாமன்றத்தினால் மடிக்கணணிகள் வழங்கப்படவுள்ளதாக அதன் தலைவர் கே.நீலகண்டன் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவ மாணவியர்களில் தமது கல்வியைத் தொடர முடியாது பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ளவர்களுக்கு அகில இலங்கை இந்து மாமன்றம் பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி மேலும் ஒரு தொகுதியினருக்கு மடிக்கணணிகள் வழங்கப்படவுள்ளன என்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தம் முடிந்த பின்னர் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய பகுகளில் இருந்து வந்த மாணவ மாணவியருக்கு அகில இலங்கை இந்து மாமன்றத்தினால மாதாந்தம் தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 300 பேருக்கும் வழங்கப்பட்டது.

மேலும் இனங்காணப்பட்ட மாணவர்களுக்கு மடிக்கணணியும் வழங்கப்பட்டன. அதன்படி இதுவரை 68 பேருக்கு மடிக்கணணி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 26 மாணவர்களுக்கு வழங்குவதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

 அத்துடன் தற்போது பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வரும் 82 மாணவ மாணவியருக்கு மனித நேய நிதி வழங்கப்பட்டு வருகின்றது. இதேவேளை சிறுவர் இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கும் தேவையான உதவிகளை மேற்கொண்டு வருகின்றோம் என்றார்.



அகில இலங்கை இந்து மாமன்றத்தினால் பல்கலை மாணவர்களுக்கு மடிக்கணணிகள் Reviewed by Admin on August 26, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.