அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு, கிழக்கில் வெற்றிடமிருந்தும் திட்டமிட்டு வெளி மாவட்டங்களுக்கு நியமனம் செய்யப்படும் தமிழ் நிர்வாகசேவை அதிகாரிகள்.

வடக்கு கிழக்கு மாணவர்களின் சேவைக்கு தமிழ் மொழிமூல பட்டதாரிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டு
இலங்கை நிர்வாகசேவை தரம் III இல் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆளணியினரை வடக்கு, கிழக்கிற்கு வெளியே உள்ள மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டள்ளனர். இந்நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் உள்ள பதவி வெற்றிடங்கள் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் மூலம் நிரப்பப்படவுள்ளது எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இலங்கை நிர்வாக சேவை ஆளணி பதவி வெற்றிடங்கள் அதிகளவில் இருப்பதை கருத்தில் கொண்டும் பொதுநிலையாக போட்டிப்பரீட்சையில் தமிழர்கள் உரிய எண்ணிக்கை அளவில் தெரிவுசெய்யப்படாமையினால் விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய வடக்கு கிழக்கு மாகாணத்தை சொந்தமாக கொண்ட தமிழ் மொழிமூலமான பட்டதாரிகளுக்கு விசேடமாக நிர்வாக சேவைக்கான போட்டிப்பரீட்சை நடத்தப்பட்டது.

இப்பகுதிக்கு அமைவாக 43 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு ஒன்பது மாதங்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சி முடிந்த பின்னர் அவர்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பதவி வெற்றிடங்களுக்கு மட்டும் நியமனம் செய்யப்படும் என கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த மாதம் நடுப்பகுதியில் அலரி மாளிகையில் அவர்களுக்காக நடைபெற்ற வைபவத்தில் ஜனாதிபதியால் நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டன. இந் நியமனக்கடிதங்களில் அவர்கள் கடமை ஏற்கவேண்டிய பணிநிலை அலுவலகங்கள் வெளிமாகாணங்களில் இருப்பது தொடர்பாக வினாவியபோது பொருத்தமான முறையில் சம்பந்தப்பட்டவர்கள் பதில் கூறாமல் மழுப்பியதாக கூறப்படுகின்றது.

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு என விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய தெரிவுசெய்யப்பட்டவர்கள் இலங்கை நிர்வாக சேவை தரம் III நிலையில் இருக்கும் வரை வடக்கு, கிழக்கில் மட்டும் கடமை புரிய வேண்டும். வெளிமாகாணங்களுக்கு இடமாற்றம் கோர முடியாது என்பது நிபந்தனையாக இருந்தபோதிலும் அது இரத்துச் செய்யப்பட்டு வடக்கு, கிழக்கில் பதவி வெற்றிடம் இருக்கும் நிலையில் வெளிமாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டிருப்பது தொடர்பில் இந்த அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பதவி வெற்றிடங்களுக்கு பெரும்பான்மை இனத்தை சேர்ந்த அதிகாரிகளை நியமிப்பதற்கு வசதியாகவே தமிழ் அதிகாரிகள் வெளிமாகாணங்களுக்கு நியமனம் செய்யப்பட்டிருப்பதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வடக்கு, கிழக்கில் வெற்றிடமிருந்தும் திட்டமிட்டு வெளி மாவட்டங்களுக்கு நியமனம் செய்யப்படும் தமிழ் நிர்வாகசேவை அதிகாரிகள். Reviewed by Admin on August 25, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.