இலங்கை மீனவர்கள் இந்திய எல்லையில் கைது
தூத்துக்குடி பகுதியில் உள்ள கடலோர காவல் படையினர் கமாண்டோ ஆனந்த குமார் தலைமையில்,கடல் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுட்டு கொண்டிருந்தனர். கன்னியாகுமரியில் இருந்து 75 கடல் மைல் தொலைவில், இலங்கை மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றனர்.
இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்து கொண்டிருந்ததால், கடலோர காவல் படையினர் படகினை மடக்கினர். படகில் இருந்த இலங்கை மீனவர்கள் ஐந்து பேரை கைது செய்தனர்.
படகினை பறிமுதல் செய்து தூத்துக்குடிக்கு கொண்டு வந்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மீனவர்கள் இந்திய எல்லையில் கைது
Reviewed by Admin
on
September 18, 2013
Rating:
No comments:
Post a Comment