இத்தாலி கடற்பரப்பில் படகொன்றில் இருந்த இலங்கையர் உட்பட 32 பேர் மீட்பு
இலங்கை மற்றும் பாகிஸ்தான் பிரஜைகள் உட்பட 32 பேரை ஏற்றிச் சென்ற படகொன்றை இத்தாலிய கடலோர காவற்படையினர்.
குறித்த படகு எரிபொருள் இன்றியும் இயந்திர கோளாறினாலும் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த வேளை, இத்தாலிய கடலோர காவற்படையினரால் அதில் இருந்தவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்
.
இத்தாலியின் ரோஜயோ, கலாபிறியா மாகாணத்தின் ரோசெல்லா யோனிகா கடற்கரையில் இருந்து 100 கடல் தொலைவில் இருந்த படகு மூழ்கிக் கொண்டிருந்தாக இத்தாலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
.
படகில் இருந்தவர்களை அடையாளம் காண்பதற்காக அவர்கள் ரோசெல்லா யோனிகா கடற்கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக இத்தாலி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தாலி கடற்பரப்பில் படகொன்றில் இருந்த இலங்கையர் உட்பட 32 பேர் மீட்பு
Reviewed by Admin
on
September 21, 2013
Rating:

No comments:
Post a Comment