யாழ். மாநகர சபை ஊழியர்கள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம்
யாழ். மாநகர சபையில் தற்காலிகமாக கடமையாற்றி வந்த ஊழியர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என கோரி இன்று சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை 8 மணி முதல் யாழ். மாநகர சபை முன்றலில் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தற்காலிக ஊழியர்களாக கடமையாற்றி வருவதாகவும், இதுவரை நிரந்தர ஊழியர்காளாக உள்வாங்க இல்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
இதுவரையில் இருந்த இரண்டு ஆணையாளர்களும் எமக்கான நேர்முக தேர்வை நடத்தி இருந்தும் நிரந்தர நியமனத்தை வழங்கவில்லை. ஆனால், தற்போது உள்ள ஆணையாளர் மீண்டும் நேர்முக தேர்வு நடத்தியே எமக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கடந்த 2002 ம் ஆண்டு எமக்கான அடிப்படை கல்வித்தகுதி 8ம் ஆண்டாக இருந்தது. தற்போது க.பொ.த. சாதாரண தரம் ஆக்கப்பட்டுள்ளது. இதனால் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாதிப்படைய உள்ளனர்.
அதேவேளை இன்று முதல் மாநகர சபையின் பாதுகாப்பு பிரிவினை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளனர். அதேபோல சுகாதார பொருளியல் பிரிவினையும் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான கேள்வி கோரல் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
எனவே மூப்பு அடிப்படையில் எமக்கான நிரந்தர நியமனம் கிடைக்கும் வரை சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
யாழ். மாநகர சபை ஊழியர்கள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம்
Reviewed by Admin
on
October 01, 2013
Rating:

No comments:
Post a Comment