அண்மைய செய்திகள்

recent
-

யாழ்.மாவட்டத்தில் ஏழாலையைச் சேர்ந்த மாணவன் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் முதலிடம்

நடந்து முடிந்த 2013ம் ஆண்டு தரம்- 5 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ். ஏழாலை மேற்கு சைவ சன்மார்க்க வித்தியாசாலையில் கல்வி பயிலும் மாணவனான பரமானந்தம் தனுராஜ் 194 புள்ளிகளை பெற்று யாழ். மாவட்டத்தில் முதல் இடம் பெற்றுள்ளார்.


 யா/ஏழாலை மேற்கு சைவ சன்மார்க்க வித்தியாசாலையை சேர்ந்த மாணவன் ஒருவன் யாழ். மாவட்டத்தில் முதலாவதாக வந்து இதுவே முதல் தடவையாகும். இம்முறை நடைபெற்ற புலமை பரிசில் பரீட்சையில் குறித்த பாடசாலையில் 23 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். 

 இதேவேளை, யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவன் முகுந்தன் மிதுலன் 193 புள்ளிகளைப் பெற்று யாழ் மாவட்டத்தில் இரண்டாம் இடத்தினையும், அளவெட்டி அருணோதயா கல்லூரி மாணவி உதயகுமார் கம்சாயினி 191 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்தினை பெற்றுள்ளனர்.

யாழ்.மாவட்டத்தில் ஏழாலையைச் சேர்ந்த மாணவன் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் முதலிடம் Reviewed by Admin on October 01, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.