வைத்தியராகி எனது மாவட்ட மக்களுக்கு சேவை செய்வதே இலட்சியம்-தரம் 5 புலமை பரிசில் பரிட்சையில் மன்னார் மாவட்டத்தில் முதல் இடம் வகிக்கும் மாணவன் என்.அருண்.
நேற்று வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் பெருபேறுகளைத் தொடர்ந்து குறித்த மாணவன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவ்வாறு தெரிவித்தார்.
-குறித்த மாணவன் மேலும் தெரிவிக்கையில்,,,,
-நான் புலமைப்பரிசில் பரிட்சையில் 185 புள்ளிகளைப்பெற்று மன்னார் மாவட்டத்தில் முதல் நிலையினை பெற்றுள்ளதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.
இதற்கு காரணமாக எனது வகுப்பாசிரியர் என்.சுந்திரேசன் அவர்கள் செயற்பாட்டார்.அவருடன் இணைந்து ஆசிரியர் ஏ.சகிலன் கற்பித்து வந்தார்.
இவர்களுடைய வழி நடத்தலை பின் பற்றியதன் காரணமாக நான் இந்த வெற்றியை அடைந்துள்ளேன்.
இது மட்டுமின்றி இப்பாடசாலையில் 29 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
எனவே எனது வெற்றிக்கு தொடர்ந்தும் ஊக்கமளித்து வந்த இப்பாடசாலையின் அதிபருக்கும் எனது பெற்றோருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.
எதிர்காலத்தில் வைத்தியராகி எனது மாவட்டத்திற்கும் எனது மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்பதே எனது இலட்சியம் என தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் 185 புள்ளிகளை பெற்று மன்னார் மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்ட மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவன் நடராஜா அருண் மேலும் தெரிவித்தார்.
வைத்தியராகி எனது மாவட்ட மக்களுக்கு சேவை செய்வதே இலட்சியம்-தரம் 5 புலமை பரிசில் பரிட்சையில் மன்னார் மாவட்டத்தில் முதல் இடம் வகிக்கும் மாணவன் என்.அருண்.
Reviewed by Admin
on
October 02, 2013
Rating:
No comments:
Post a Comment