அண்மைய செய்திகள்

  
-

மன்னார் வலயக்கல்வி அலுவலகமும்,முறைசாராக்கல்விப் பிரிவும் இணைந்து நடாத்திய கைவினைப் பொருட்களுக்கான கண்காட்சி.-படங்கள்

மன்னார் வலயக்கல்வி அலுவலகமும்,முறைசாராக்கல்விப் பிரிவும் இணைந்து நடாத்திய கைவினைப் பொருட்களுக்கான கண்காட்சியும்,சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இன்று புதன் கிழமை காலை மன்னார் வலயக்கல்வி பணிமனையின் முகாமைத்துவ மண்டபத்தில் இடம் பெற்றது.

 மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எம்.சியான் தலைமையின் இடம் பெற்ற குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக தமிழ்;தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கௌரவ விருந்தினராக மன்னார் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் என்.ஏ.துரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 இதன் போது முறைசாராக்கல்விப்பிரிவினால் நடாத்தப்பட்ட தொழிற்பயிற்சியில் கலந்து கொண்டு தொழிற்பயிற்சியை பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. 

 இதனைத் தொடர்ந்து பயிற்சி பெற்றவர்களினால் உருவாக்கப்பட்ட பொருட்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டது.இதன் போது தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.



























மன்னார் வலயக்கல்வி அலுவலகமும்,முறைசாராக்கல்விப் பிரிவும் இணைந்து நடாத்திய கைவினைப் பொருட்களுக்கான கண்காட்சி.-படங்கள் Reviewed by Admin on October 02, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.