கமலேஷ் சர்மா இலங்கை வந்தடைந்தார்.
பொதுநலவாய அமையத்தின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா சில மணி நேரத்தின்
முன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக கொழும்பை சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது .
இதேவேளை , பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதற்காக பல நாடுகளின் பிரதிநிதிகள் இன்று சனிக்கிழமை முதல் வருகை தரவுள்ளதனால் கொழும்பில் பல வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என்று போக்குவரத்து பொலிஸார் அறிவித்தனர் .
இதன்படி , கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை உட்பட காலி வீதி , பௌத்தாலோக்க மாவத்தை , கொம்பனித்தெரு ஆகியனவே தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
கமலேஷ் சர்மா இலங்கை வந்தடைந்தார்.
Reviewed by Author
on
November 09, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment