அண்மைய செய்திகள்

recent
-

சவுதியிலிருந்து 90 வீதமான இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்

சட்டவிரோதமாக சவுதி அரேபியாவில் தங்கியிருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலம் நேற்று நள்ளரவுடன் நிறைவடைந்துள்ளது. 

இந்நிலையில் இலங்கை பிரஜைகள் 90 வீதமானவர்கள் மீண்டும் அழைத்து வரப்பட்டுள்ளனர் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

இலங்கை வெளிநாட்டு வேலைவாயப்பு வாரியத்தின் துணை பொது முகாமையாளரும் ஊடகப் பேச்சாளருமான மங்கள ரன்தெனிய, பொது மன்னிப்பு வழங்கப்பட்ட காலத்துக்குள் அதனைப் பெற தகுதியுடைய சுமார் 10,000 பேரும் நாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். 

மேலும் பெண்கள் உட்பட ஏனைய 6,000 பேரைப் பொறுத்த வரையில் சட்ட விரோதமாக தங்கியிருந்தாலும் சவுதி அரேபிய அரசாங்கத்தின் பொது மன்னிப்பு வரையறைக்குள் அவர்கள் உட்படாதவர்கள். 

அதாவது விசா இன்றி தங்கியிருந்தமை, கைவிரல் அடையாளங்கள் பதிவு செய்யாமை போன்ற அந்த நாட்டு சட்ட திட்டங்களை இவர்கள் மீறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படியானவர்களை நாட்டுக்கு திருப்பி அழைப்பதற்கான முயற்சிகள் சவுதியில் உள்ள இலங்கை தூதுவராலயத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் அவர்களை நாட்டுக்கு அழைப்பது தொடர்பில் பிரச்சினையாகவே உள்ளது என கூறப்பட்டுள்ளது. 


பொது மன்னிப்பு காலத்திற்குள் வெளியேறத் தவறி, தொடர்ந்தும் சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு எதிராக தமது நாட்டு குடிவரவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே சவுதி அரேபியா அறிவித்துள்ளது. 

அதாவது சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு 2 வருடச் சிறைத்தண்டனை அல்லது சுமார் 10,000 சவுதி ரியால் தண்டப்பணமாக செலுத்த நேரிடும் என அந்நாட்டு சட்டம் கூறகின்றது. 

சவுதியிலிருந்து 90 வீதமான இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர் Reviewed by Author on November 04, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.