இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமை மீறல் - தீபக் ஓபராய்
இலங்கையில் தொடர்ந்து மனித உரிமைகள் மீறப்படுவதாக கனடா சார்பில் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொண்ட கனேடிய வெளியுறத்துறை அமைச்சின் பாராளுமன்ற செயலாளர் தீபக் ஓபராய் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஒபராய் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையில் தொடர்ந்து தமிழர்கள் பீதியுடன் வாழும் நிலை உள்ளது. இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதால் பிரதமர் ஸ்டீவன் ஹாப்பர் இந்த மாநாட்டை புறக்கணித்தார். எனவே அவருக்கு பதிலாக மாநாட்டில் பங்கேற்ற நான், இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதை கண்காணித்தேன்.
மேலும் போரில் பாதித்த வடக்கு மாகாணத்தில் உள்ள ஆணையிறவுக்கு சென்று மரணம் அடைந்தவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினேன் என்றார்.
இதற்கிடையே மனித உரிமை மீறல்கள் விஷயத்தில் இலங்கை அரசு அக்கறை காட்ட வேண்டுமானால் சர்வதேச நாடுகள் அந்நாட்டின் மீது தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது.
இந்த தகவலை சர்வதேச மன்னிப்பு சபை பொதுச்செயலாளரின் பொறுப்பாளர் ஸ்டீவ் க்ரவுசோ தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது, இலங்கையில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் உச்ச கட்டத்தில் இருக்கும்போது அங்கு காமன்வெல்த் மாநாடு நடத்தியது ஏற்று கொள்ளத்தக்கதல்ல.
எனினும், சர்வதேச சமூகம் இலங்கையின் மீது தொடர்ந்து அழுத்தம் தந்தால் போர்க்குற்றம் உள்பட பல விஷயங்களுக்கு தீர்வுகள் காண முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து ஒபராய் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையில் தொடர்ந்து தமிழர்கள் பீதியுடன் வாழும் நிலை உள்ளது. இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதால் பிரதமர் ஸ்டீவன் ஹாப்பர் இந்த மாநாட்டை புறக்கணித்தார். எனவே அவருக்கு பதிலாக மாநாட்டில் பங்கேற்ற நான், இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதை கண்காணித்தேன்.
மேலும் போரில் பாதித்த வடக்கு மாகாணத்தில் உள்ள ஆணையிறவுக்கு சென்று மரணம் அடைந்தவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினேன் என்றார்.
இதற்கிடையே மனித உரிமை மீறல்கள் விஷயத்தில் இலங்கை அரசு அக்கறை காட்ட வேண்டுமானால் சர்வதேச நாடுகள் அந்நாட்டின் மீது தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது.
இந்த தகவலை சர்வதேச மன்னிப்பு சபை பொதுச்செயலாளரின் பொறுப்பாளர் ஸ்டீவ் க்ரவுசோ தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது, இலங்கையில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் உச்ச கட்டத்தில் இருக்கும்போது அங்கு காமன்வெல்த் மாநாடு நடத்தியது ஏற்று கொள்ளத்தக்கதல்ல.
எனினும், சர்வதேச சமூகம் இலங்கையின் மீது தொடர்ந்து அழுத்தம் தந்தால் போர்க்குற்றம் உள்பட பல விஷயங்களுக்கு தீர்வுகள் காண முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமை மீறல் - தீபக் ஓபராய்
Reviewed by Author
on
November 18, 2013
Rating:

No comments:
Post a Comment