தமிழ் முறைப்படி சேலை அணிந்து தீபாவளி கொண்டாடிய பிரித்தானிய பிரதமரின் மனைவி.
வட மேற்கு லண்டனிலுள்ள சுவாமி நாராயணன் ஆலயத்தில் திங்கட்கிழமை தீபாவளி
பண்டிகையையொட்டி இடம்பெற்ற நிகழ்வில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தனது பாரியார் சமந்தா சகிதம் கலந்து கொண்டார் .
இதன்போது சமந்தா தமிழ் பண்பாட்டின் பிரகாரம் சேலை அணிந்து வந்தமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது .
1995 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட மேற்படி ஆலயமானது இந்தியாவுக்கு வெளியிலுள்ள மிகப்பெரிய இந்து ஆலயமாக கருதப்படுகிறது .
எனினும் டேவிட் கமரூன் தனது வழமையான பாணியில் முழுமையான ஆடை அணிந்திருந்தார் .
அவர்கள் இருவரும் பொப்பி மலர்களை அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது .
இந்து பாரம்பரிய வழக்கத்தின் பிரகாரம் அவர்கள் இருவரும் பாதணிகளை ஆலயத்திற்கு வெளியே கழற்றி வைத்துவிட்டு ஆலயத்திற்குள் பிரவேசித்தனர் .
டேவிட் கமரூனும் சமந்தாவும் ( 42 வயது ) சுவாமி நாராயணன் ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாடுகளில் பங்கேற்றனர் .
தமிழ் முறைப்படி சேலை அணிந்து தீபாவளி கொண்டாடிய பிரித்தானிய பிரதமரின் மனைவி.
Reviewed by Author
on
November 06, 2013
Rating:
Reviewed by Author
on
November 06, 2013
Rating:

No comments:
Post a Comment