இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்அ.அஸ்மின் (வடக்கு மாகாணசபை உறுப்பினர்)
தைப்பொங்கலைக் கொண்டாடும் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் எனது தைப்பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றித்துவிட்ட தைப்பொங்கல் திருநாள் பல்வேறு நம்பிக்கைகளை சுமந்து நிற்கின்றது. “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பது பொதுவாக எல்லோராலும் முன்வைக்கப்படும் நம்பிக்கையாக இருக்கின்றது. உண்மைதான் தை பிறக்கின்றபோது வழிகளும் பிறக்குமாயின் அது சிறப்பானதாக இருக்கும். அதுவே எல்லோரதும் எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றது.
எமது மக்கள் சமூக, பொருளாதார அரசியல் ரீதியாக பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர். இச்சந்தர்ப்பத்தில் அத்தகைய சவால்களை வெற்றிகொண்டு சுபீட்சமான வாழ்வை நோக்கிப் அடியெடுத்து வைக்கின்ற ஒரு சிறப்பான நாளாக இத்திருநாள் எல்லோருக்கும் அமையவேண்டும். கஷ்டங்கள், துன்பங்கள், நோய்கள், வறுமை போன்ற உலகாயுத நெருக்கடிகளுக்குள் சிக்கியுள்ள ஒவ்வொரு மனிதனும், குடும்பமும், சமூகமும் அத்தகைய நெருக்கடிகளில் இருந்து வெளிவந்து சிறப்பான வாழ்வை அடைந்துகொள்ள நாம் இத்திருநாளில் உறுதிகொள்ளவேண்டும்.
ஒற்றுமையும், ஐக்கியமும் எமது மக்களின் பலமாக இருக்கின்றன. மத ரீதியான வேறுபாடுகள், சமூக ரீதியான வேறுபாடுகள், இனரீதியான வேறுபாடுகளுக்கும் அப்பால் சென்று மனிதம் என்ற ஒற்றைப்புள்ளியில் நாம் ஐக்கியப்படவேண்டும். தற்போது தமிழ் மக்களிடம் ஏற்பட்டிருக்கின்ற அரசியல் ரீதியான ஒற்றுமை பல்வேறு கோணங்களிலும் சவாலுக்கு உட்படுத்தப்படுகின்றது. அத்தகைய பிளவுகளுக்கும், முரண்பாடுகளுக்கும் நாம் இடம்தரக்கூடாது. அத்தகைய ஐக்கியத்தை மேலும் வலுப்படுத்தி, ஏனைய சமூகங்களுடனும் ஐக்கியத்தை மேலும் உறுதிப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
இத்திருநாள் எம் எல்லோருக்கும் சிறப்பான நன்மைகளைப் பெற்றுத்தரும் நாளாக அமையஅனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அ.அஸ்மின்
வடக்கு மாகாணசபை உறுப்பினர்
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்அ.அஸ்மின் (வடக்கு மாகாணசபை உறுப்பினர்)
Reviewed by Admin
on
January 13, 2014
Rating:

No comments:
Post a Comment