மன்னாரில் பாதசாரிகளுக்கு இடையூறு விளைவிக்கும் நடைபாதை வியாபார நிலையங்கள் அகற்றல். [படங்கள் இணைப்பு]
மன்னார் நகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வீதியோர மற்றும் நடை பாதை
வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை சீர்படுத்தும் வேலைத்திட்டத்தில் மன்னார் நகர சபை ஈடுபட்டு வருகின்றது .
பாதசாரிகளுக்கு இடையூறு விளைவிக்கும் முகமாக செயற்படும் நடைபாதை வியாபார மற்றும் அங்காடி வியாபார நடவடிக்கையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றது .
- . இந்த நிலையில் நேற்று (10-01-2014) மன்னார் பஸார் பகுதிக்கு சென்ற மன்னார் நகர சபையின் தலைவர் எஸ் ஞானப்பிரகாசம் உற்பட நகர சபை செயலாளர் , அலுவலகர்கள் பாதசாரிகளுக்கு இடையூறு விளைவிக்கக்கூடியாதக காணப்படும் நடைபாதை வியாபார நிலையங்களை அகற்றும் நடிவடிக்கைகளில் ஈடுபட்டனர் .
அதே வேளை அரச மற்றும் தனியார் பேரூந்து வளாகத்தில் பயணிகளின் நலன் கருதி குடிநீர் தாக்கிகளையும் மன்னார் நகர சபையினால் நிறுவப்பட்டிருக்கின்றது .
இந்த நடவடிக்கைகளில் மன்னார் நகரசபையின் தலைவர் செயலாளர் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஒன்றிணைந்து ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது .
மன்னாரில் பாதசாரிகளுக்கு இடையூறு விளைவிக்கும் நடைபாதை வியாபார நிலையங்கள் அகற்றல். [படங்கள் இணைப்பு]
Reviewed by Admin
on
January 11, 2014
Rating:

No comments:
Post a Comment