அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சரின் - தைப்பொங்கல் வாழ்த்துக்கள்..

தை பிறந்தால் வழி பிறக்கும் என்னும் கூற்றுக்கிணங்க தமிழர்  ஆண்டின் தொடக்கம் எனப்படும் தை மாதம் முதல்நாளிலே தமிழர்களினதும்இ உழவர்களினதும் திருநாளாம் தைப் பொங்கல் தினமாம் இன்று நமது இலங்கைத்திருநாட்டிலும்இ புலம்பெயர் நாடுகளிலும் வாழ்ந்து வருகின்ற தமிழர்கள் அனைவரதும் இல்லங்களில் பொங்கல் பொங்கஉள்ளங்களில் இன்பம் பொங்க வாழ்த்துகின்றேன்.....

அன்றியும்இ சொந்த ஊரிலேஇ சொந்த மண்ணிலேஇ சொந்த வீட்டின் முற்றத்திலே பொங்கலோ பொங்கல் எனப் பொங்கிமகிழ்ந்திட ஏக்கமுடன்  ஏங்கி நிற்கும் அனைத்து நெஞ்சங்களுக்கும் இன்பமும்இ நிம்மதியும்இ சாந்தியும்இ சமாதானமும்இஅன்பும்இ அறமும் பொங்கி வழிந்திடஇ தேடுதல்கள் யாவும் கிடைத்திடஇ தேவைகள் யாவும் நிறைந்திட எமது மண்ணிலேவாழையடி வாழையாக தொடர்ந்திடும் எம் தமிழர் தம் வரலாற்றின் வளங்களும்இ கலாசாரம் மற்றும் பண்பாடுகல்வியின் வளர்ச்சியும்இ உழவுத் தொழிலின் மேன்மைச் சிறப்பும் மீண்டும் பொங்கி வழிந்தோட ஒளியும் சுபீட்சமும்மலர்ந்திடஇ சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தி பொங்கல் பொங்கி மகிழ்ந்திட நிச்சயமாக தை பிறக்கும் போதுவாசல்கள் திறக்கப்பட்டு வழிகளும் பிறக்குமென்ற நம்பிக்கையோடு இறைவனை பிரார்த்தித்துக்கொண்டு எனதுஉள்ளம்  நிறைந்த வாழ்த்துக்களைக் கூறி நிற்கின்றேன் - வடக்கு மாகான மீன்பிடிஇ போக்குவரத்துஇ வர்த்தக வாணிபம்மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன்.

வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சரின் - தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.. Reviewed by Author on January 14, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.