மன்னாரில் தை பொங்கல் தின நிகழ்வுகள் -படங்கள்
தை திங்கள் முதலாம் நாளான இன்று உலக தமிழர்கள் தை பொங்கல் திருநாளை வெகுவிமர்சையாக கொண்டாடுகின்றனர்.
மன்னார் மாவட்ட மக்கள்; தை பொங்கலை மிக விமர்சையாக கொண்டாடுகிறார்கள்;
இதனை அடுத்து இன்று இந்து கோவில்களிலும் , கிறிஸ்தவ தேவாலயங்களிலும் தை பொங்கலை சிறப்பிக்கும் முகமாக விசேட மத வழிபாடுகள் நடைபெற்றது.
இதன் அடிப்படையில் மன்னார் அருள்மிகு திருக்கேதீஸ்வரம் கோவிலில் சிவாச்சாரியார் பாலசுப்பிரமணியம் மற்றும் கோவிலின் பிரதம குரு கிருஸ்ணன் ஆகியோர் இணைந்து பொங்கல் பொங்கி விசேட பூஜைகளை நடத்தியிருந்தனர்;.
இதேவேளை மன்னார் புனித. செபஸ்த்தியார் பேராலயத்தில் பொங்கல் பொங்கி விசேட மத வழிபாடுகளை அருட்தந்தை ரெறன்ஸ் மற்றும் அருட்தந்தை ஜேசுராஜன் சில்வா ஆகியோர் இணைந்து திருப்பலியை ஒப்புகொடுத்தனர்.
மன்னாரில் தை பொங்கல் தின நிகழ்வுகள் -படங்கள்
Reviewed by Author
on
January 14, 2014
Rating:
No comments:
Post a Comment