சர்ச்சைக்குரிய படத்தை மாற்ற மாட்டோம்:அமெரிக்கா
.jpg)
வடக்கில், இரணப்பாலை சென்.அந்தனிஸ் பாடசாலை மைதானத்தின் மீது 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை இராணுவத்தினர் ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டு நூற்றுக்கணக்கான பொதுமக்களை கொன்று குவித்ததாக அமெரிக்காவின் சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியிருந்தது.
இந்த புகைப்பட்டத்தில் இலங்கைக்கு வருகைதந்திருந்த அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே.ரெப்பும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே. சிசனும் இருந்தனர்.
இந்த புகைப்படத்துடனான செய்தி தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திடம் விளக்கம் கோரப்படும் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி கருணாதிலக்க அமுனுகம தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சர்ச்சைக்குரிய படத்தை மாற்ற மாட்டோம்:அமெரிக்கா
Reviewed by Author
on
January 11, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment